முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசாரம் செய்ய தொகுதிக்கு ரூ.1 லட்சம் குஷ்பு வாங்கினார்: காங்கிரசில் திடீர் சர்ச்சை

புதன்கிழமை, 1 ஜூன் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொகுதிக்கு ரூ.1 லட்சம் குஷ்பு வாங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள நடிகை குஷ்பு அகில இந்திய செய்தி தொடர்பாளராகவும் இருக்கிறார். காங்கிரஸ் பேச்சாளர்கள் கட்சி கூட்டங்களுக்கு செல்லும் போது போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளை கட்சி தலைமை ஏற்கும். சன்மானம் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால் மாவட்ட கமிட்டிகள் பேச்சாளர்களுக்கு தங்களால் முடிந்தவரை ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதும் உண்டு. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டது.

காங்கிரஸ் தொகுதிகள் அனைத்திலும் குஷ்பு பிரசாரம் செய்ய வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அனைத்து தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்ய வரும்படி கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி குஷ்புவும் பிரசாரம் செய்ய சென்றார். அப்போது வேட்பாளர்களிடம் ரூ.1 லட்சம் வரை சன்மானம் வாங்கியதாக திடீர் சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறும் போது, ஒரே தொகுதியில் பல இடங்களில் பேசும்படி வலியுறுத்துவார்கள். எனவே இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சென்னை புறநகரில் திருவள்ளூர் மாவட்டத்தில் குஷ்புவுக்கு சன்மானம் வழங்கப்பட்டது பற்றி அந்த தொகுதிகளின் நிர்வாகிகளிடம் கேட்ட போது, குஷ்பு இந்த பகுதியில் மட்டும் 8 இடங்களில் பிரசாரம் செய்துள்ளார். ஆனால் சன்மானம் எதுவும் கேட்கவில்லை. வெயிலிலும் அசராமல் திறந்த ஜீப்பிலேயே சென்று ஆதரவு திரட்டினார். எனவே அவர் சன்மானம் வாங்கியதாக கூறப்படுவதை எங்களால் நம்பமுடியவில்லை என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்