முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரத்குமார் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களின் கோரிக்கைகளை பெறுவதற்கு தனி அலுவலர் அமைத்த முதல்வர்  ஜெயலலிதாவுக்கு சரத்குமார்  பாராட்டு.

இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கையில்,

முதலமைச்சர்  ஜெயலலிதா   மாநிலம் முழுவதும் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டுவதற்கும், அதை செயல்படுத்தவும் முற்படுகையில் தனது தொகுதி குறித்த செயல்பாடுகள் விடுபட்டு விடக் கூடாதென்பதற்காக தனது பிரதிநிதியாக ஒரு தனி அலுவலரை நியமித்து மக்களின் மனுக்களை பெற்று மேலும் தனது கவனத்திற்கு அனைத்து மனுக்களும் கொண்டுவரப்படும் என்று கூறியிருப்பது பாராட்டக்குரியது. முதல்வரின் இந்த வழிமுறை மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலாக இருக்கும் ஏனைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி பாகுபாடு இன்றி முதலமைச்சர்  ஜெயலலிதா  இந்த செயலை ஒரு முன்னுதாரணமாக கருதி தனது தொகுதி குறித்த அனைத்து பிரச்சனைகளையும், வளர்ச்சி சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கும் தனி கவனம் செலுத்தி ஒரு கார்பரேட் நிறுவனம் போல செயல்பட தொடங்கினால், இந்தியாவில் தமிழகம் அனைத்து துறையிலும் மிக வேகமாக முன்னிலை பெரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.   தமிழக மக்களின் அடையாளமான மக்களின் அறிவும் உழைப்பும் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு செயலும் முன்னேற்றத்தை நோக்கி செல்லுமேயானால் 2020 என்ற அப்துல் கலாம் போன்ற சான்றோர்களின் கனவு மெய்ப்படும்கேளுங்கள் தரப்படும் என்ற மந்திரத்தை நினைவில்  கொண்டு, தொகுதியை முன்னுதாரணமாக நிலை நிறுத்த மக்களும் நல்முறையில் ஒத்துழைக்க வேண்டும். முதலமைச்சரின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள், ஆர் கே நகர் தொகுதி மக்களுக்கு வாழ்த்துக்கள் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்