முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசியாவிலேயே மிகப்பெரிய கண்மாயை தூர் வார நடிகர் கருணாஸ் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016      சினிமா
Image Unavailable

சென்னை :  ஆசியாவிலேயே மிகப்பெரிய கண்மாயான ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை தூர் வார வேண்டுமென சட்டபேரவையில் நடிகர் கருணாஸ் வலியுறுத்தினார்.

தமிழக சட்டபேரவையில் கவர்னர் உரை விவாதத்தில் நடிகரும், மூவேந்தர் புலிப்படை தலைவருமான திருவாடணை எம்.எல்.ஏ கருணாஸ் பேசியதாவது:

திருவாடணை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எனக்கு வாய்ப்பும் வெற்றியையும் உருவாக்கி கொடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருவாடணை தொகுதி, நீண்ட கடற்கரையை கொண்டது. இந்த தொகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். திருவாடனை தொகுதியில் உள்ள கண்மாய்களை தூர்வார வேண்டும் ஆசியாவிலேயே மிகப்பெரிய 2 வது மிகப்பெரிய கண்மாய் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் அந்த கண்மாயை தூர்வரவேண்டும். அதை தூர்வாரினால் அதில் தேங்கும் மழை நீரை கொண்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பயன்அடையலாம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்