முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக பிரமுகர்கள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - நாமக்கல் பேரூராட்சி அதிமுக செயலாளர் சிவானந்தம், தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கண்ணுசாமி ஆகியோர் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:  நாமக்கல் மாவட்டம், சு. பட்டணம் பேரூராட்சி அதிமுக  செயலாளர் சேவல்ஆ. சிவானந்தம் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டுவருத்தமுற்றேன்.

கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றிவந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு. சிவானந்தத்தை  இழந்து வாடும் அவரதுகுடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்லஇறைவனைப் பிரார்த்திக்கிறேன்.  தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் கண்ணுசாமி,திருவாரூர் மாவட்ட விவசாயப் பிரிவு இணைச் செயலாளர். செம்பை. ராமச்சந்திரன்,புதுடெல்லி மாநிலம், கழகப் பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி ஆகியோர் மறைவுக்கும்

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் அவர்களின் தாயார் ந.ரங்கம்மாள் உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். தாயாரை இழந்து வாடும் அன்புச்சகோதரர் செல்வராஜ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்