முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோமாலியா நாட்டில் ஓட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 15 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2016      உலகம்
Image Unavailable

மொகாதிசு : சோமாலியா நாட்டில் ஓட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதிசு நகரில் உள்ள ஓட்டல் ஒன்றின் நுழைவாயில் மீது மனித வெடிகுண்டு பயங்கரவாதி ஒருவன், வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தால் மோதினான். அதனால் எழுந்த களேபரத்தை பயன்படுத்தி, ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் சிலர் ஓட்டலுக்குள் புகுந்தனர்.

அங்கு தங்கி இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில், 2 ஆசாமிகள் பலியானார்கள். இருப்பினும், மற்றவர்கள் அங்கு தங்கி இருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டனர்.

ஓட்டலின் உச்சியில் நின்றபடியும் மர்ம நபர்கள் சிலர், பாதுகாப்பு படையினருடன் சண்டையிட்டனர். கைஎறி குண்டுகளையும் வீசினர். மோதலில் பாதுகாப்பு படை வீரர், பொதுமக்கள் என மொத்தம் 14 பேர் பலியானார்கள், 12-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளிடம் இருந்து ஓட்டலை மீட்டனர்.

சோமாலியாவில் மேற்கத்திய நாடுகள் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஆட்சியை கலைக்கவேண்டும் என்று அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்