முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கி விமானநிலைய தாக்குதல் சம்பவத்தில் 13 பேர் கைது

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      உலகம்
Image Unavailable

இஸ்தான்புல்  - இஸ்தான்புல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது சம்பவத்தில் 13 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படை கைது செய்து உள்ளது.  துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகர சர்வதேச விமான நிலையத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 42 பேர் பலியாயினர். 200–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.   இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் டாக்சியில் வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களை தேடும் பணியில் ராணுவம் களமிறங்கியது. இஸ்தான்புல் நகர் முழுவதும் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் அப்போது மூன்று வெளிநாட்டவர்கள் உள்பட ஐ.எஸ். ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிலையத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன் வெளிநாட்டை சேர்ந்தவனாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. துருக்கி ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் குர்துஸ் கிளர்ச்சியாளர்களால் தொடர்ந்து பல்வேறு கொடூரத் தாக்குதல்களை எதிர்க்கொண்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்