எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அம்மா பேரவை சார்பில் 2-வது நாளாக நடைபெற்ற, செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் 50 லட்சம் புதிய இளம் வாக்காளர்களை அ.தி.மு.க.வில் இணைத்திடவும், உள்ளாட்சி தேர்தலில் 100 சத முழுமையான வெற்றியை பெற்றிடவும், சபதம் ஏற்கப்பட்டது.
தமிழக முதல்வரின் ஆளுமை திறனைக் கண்டு அணிவகுத்து நிற்கின்ற புதிய இளம் வாக்களர்களை கழகத்தில் இணைத்திட கிராமம், கிராமமாக சென்று புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் மற்றும் முதல்வரின் சரித்திர சாதனைகளை வீடு வீடாக எடுத்து சென்று வரும் உள்ளாட்சித் தேர்தலில், 100 சதவீதம் வெற்றியை பெற்றிடவும், அம்மா பேரவையின் சார்பில், செயல் திறன் மேம்பாட்டு பயிச்சி முகாம் நடைபெற்றது.
அம்மா பேரவை சார்பில், அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில், தலைமை கழகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கழக ரீதியாக செயல்பட்டு வரும் 50 மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 2-வது நாள் நிகழ்ச்சியாக, கீழ்க்கண்ட 15 தலைப்புகளான 1) அம்மா அவர்களின் தலைமை பண்புகளை போற்றிட, 2) தன்னை அறிதல், 3) எண்ணங்களை மேம்படுத்துதல், 4) உறவுகள் மற்றும் உணர்வுகள் 5) தனி மனித மேம்பாடு 6) மாண்புமிகு அம்மா அவர்களின் அற்புதத் திட்டங்களை அகிலம் முழுவதும் எடுத்து சென்றிட 7) பேச்சாற்றலை வளர்த்தல் 8) எழுத்தாற்றலை வளர்த்தல் 9) செயல் திறனை வளர்த்தல் 10) வெற்றிக்கான திறவுகோல் 11) அம்மா அவர்களின் ஆளுமைத் திறனை அகிலம் முழுவதும் கொண்டு சென்றிட 12) கழகப் பணிகள் 13) மக்கள் பணிகள் 14) சாதனை விளக்க பிரச்சாரம் 15) மக்கள் தொடர்புக்கான பண்புகளை வளர்த்தல் ஆகிய தலைப்புகளில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன்உசேன், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் மு. தம்பிதுரை,எம்.பி., கழக அமைப்புச் செயலாளர் என். தளவாய்சுந்தரம், கழக இலக்கிய அணிச் செயலாளர் பா. வளர்மதி, கழக அமைப்புச் செயலாளர் சுதா கே. பரமசிவம், தூத்துக்குடி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சருமான கடம்பூர் செ. ராஜு, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், இந்து, சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், கழக செய்தி தொடர்பாளர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா. துரைசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் தலைமைக் கழகப் பேச்சாளர்கள், பேராசிரியர்கள் கலந்துக் கொண்டு பயிற்சி வழங்கினர்.
அம்மா பேரவைச் செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் இந்த முகாமில் பேசியதாவது:
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2011-ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் கழகத்திற்கு மாபெரும் இமாலய வெற்றி பெற்றுத் தந்துள்ளார்கள். கழக தொண்டர்களையும்,மக்களையும் இருகண்களாக நினைத்து மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.
புரட்சித் தலைவர் மறைவின் போது கழக தொண்டர்களின் எண்ணிக்கை 16 லட்சமாக இருந்தது. அதை உயர்த்தி 1 1/2 கோடிக்கு மேல், தூய தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக இன்று உருவாக்கி, எவராலும் அசைக்க முடியாத மாபெரும் எஃகு கோட்டையாக கழகத்தை உருவாக்கி உள்ளார். தற்போது அம்மா அவர்கள் நமக்கு ஒரு புனித பணியினை வழங்கி உள்ளார்கள். முதலாவதாக, அம்மாவின் மீது பற்றுக்கொண்ட இளைய வாக்காளர்களை கிராமம், கிராமமாக சென்று கண்டறிந்து, அவர்களை நாம் கழத்தில் இணைத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் 50 லட்சம் புதிய இளம் வாக்காளர்களை கழகத்தில் இணைத்திட வேண்டுமென்ற, லட்சியத்தில் நாம் செயல்படுவதோடு, இந்திய திருநாட்டில் இதுவரை இந்த வையகத்தில், செய்திடாத திட்டங்களை எல்லாம், தமிழக மக்களுக்கு வழங்கிய ஒரே தலைவி என்றால், நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மட்டுமே, நடைபெற்ற 2016 சட்டமன்ற தேர்தலில் மிகபெரிய வெற்றிப் பெற்று, கழகம் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைக்கும் உரிமையை பெற்றுத் தந்து 32 ஆண்டுகளுக்கு பிறகு, மாபெரும் வரலாற்று புகழை பெற்றுத் தந்த அம்மா அவர்கள் வாக்களித்த மக்களின் விரல் மை ஈரம் காய்வதற்குள், வாக்குறுதி நிறைவேற்றி தந்தவர் புரட்சித் தலைவி அம்மா.
இப்படி அம்மா அவர்களின் சாதனைகளையெல்லாம், தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வீடு வீடாக சென்று, அம்மா அவர்களின் சரித்திர சாதனைகளை பட்டிலிட்டு, வரும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றியினை, பெற்றே தீரவேண்டும் என்று சபதம் ஏற்று, அந்த வெற்றியை அம்மாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கும் வரை, அயராது பாடுபடுவோம் என்று, பேசினார்.
கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் மு. தம்பித்துரை, எம்.பி., பேசியதாவது:
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ள முக்கிய பணி வரும் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை கழகத்திற்கு பெற்றிட வேண்டும் என்பதாகும். இந்த வெற்றிக்கு பல்வேறு செயல்திறன்கள் உள்ளது. அதில் முக்கியமானது, கடந்த 2009, 2011, 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஒவ்வொரு பூத் வாரியாக, ஓட்டு வங்கிகளை நாம் சரிபார்க்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பூத் வாரியாக கழக தொண்டர்கள் அம்மாவின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கருணாநிதி செய்யும் தில்லு முல்லுகளை மக்களுக்கு எடுத்து கூறிட வேண்டும். மேலும், மேற்கண்ட அனைத்து தேர்தலிகளிலும், அம்மாவின் வாக்கு வங்கி ஒருபோது குறையவில்லை என்பதை குறிப்பிட தக்காகும். ஆகவே, உள்ளாட்சித் தேர்தலில், நாம் கடுமையாக களப்பணியாற்றி உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றியினை நாம் பெற வேண்டும் என்று, பேசினார்.
கழக இலக்கிய அணிச் செயலாளர் பா. வளர்மதி பேசியதாவது:
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நடைபெற்ற கூட்டத் தொடரில், எதிரி கட்சிகளுக்கு சவால் விட்டு பேசினார். ஆனால், அவர்களால் சரியான பதிலைக்கூட கூற முடியவில்லை. கச்சத் தீவு பிரச்சனையில் கருணாநிதி செய்த துரோகங்களை அம்மா அவர்கள் பட்டியலிட்டு கூறியபோது, எதிரி கட்சியினர் பதில் கூற முடியாமல், திணறினர். இதுமட்டுமல்லாமல் அம்மா அவர்கள் அனைத்து துறைகளிலும், செய்த சாதனைகளை பட்டியலிட்டு புள்ளி விவரத்துடன் கூறினார். இதுபோன்ற சட்டமன்ற கூட்டங்களிலும், தினந்தோறும் அம்மா அவர்கள் வெளியிட்டு வரும் அறிக்கைகளை, நிர்வாகிகள் நன்கு படித்து, அதை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். அம்மா அவர்கள் கூறி வருவதை, மக்களிடத்தில் எடுத்து சொன்னால் போதும், வெற்றி என்பது நமக்கு 100 சதவீதம் கிடைத்துவிடும் என்று, பேசினார்.
கழக செய்தி தொடர்பாளர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் பேசியதாவது:
அம்மா அவர்கள் செய்த சாதனைகள், இந்தியாவின் எந்த மாநிலமும் செய்தது கிடையாது. அதேபோல், கருணாநிதியை எடுத்துக் கொண்டால், அவர் மக்களுக்கு செய்த துரோகங்களை பட்டியலிட முடியாது. தன் குடும்ப நலன் ஒன்றையே பெரியதாக கருதி, தமிழகத்தின் ஜீவாதார உரிமையை தாரவார்த்து கொடுத்தவர் கருணாநிதி. இதுபோன்ற கருணாநிதி செய்யும் தில்லு-முல்லுகள், துரோகங்கள் அனைத்தையும் மக்களிடத்தில் பட்டியலிட்டு, எடுத்துக் கூறி வரும் உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு 100 சதவீத வெற்றியினை பெற்றுத் தரவேண்டும் என்று, அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.