முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது நாளாக நடந்த செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்: உள்ளாட்சி தேர்தலில் 100 சத வெற்றியை பெற்றிட அம்மா பேரவை சபதம்.

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, அம்மா பேரவை சார்பில் 2-வது நாளாக நடைபெற்ற, செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் 50 லட்சம் புதிய இளம் வாக்காளர்களை அ.தி.மு.க.வில் இணைத்திடவும், உள்ளாட்சி தேர்தலில் 100 சத முழுமையான வெற்றியை பெற்றிடவும், சபதம் ஏற்கப்பட்டது.

தமிழக முதல்வரின் ஆளுமை திறனைக் கண்டு அணிவகுத்து நிற்கின்ற புதிய இளம் வாக்களர்களை கழகத்தில் இணைத்திட கிராமம், கிராமமாக சென்று புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் மற்றும் முதல்வரின் சரித்திர சாதனைகளை வீடு வீடாக எடுத்து சென்று வரும் உள்ளாட்சித் தேர்தலில், 100 சதவீதம் வெற்றியை பெற்றிடவும், அம்மா பேரவையின் சார்பில், செயல் திறன் மேம்பாட்டு பயிச்சி முகாம் நடைபெற்றது.

அம்மா பேரவை சார்பில், அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார்  தலைமையில், தலைமை கழகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கழக ரீதியாக செயல்பட்டு வரும் 50 மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 2-வது நாள் நிகழ்ச்சியாக, கீழ்க்கண்ட 15 தலைப்புகளான 1) அம்மா அவர்களின் தலைமை பண்புகளை போற்றிட, 2) தன்னை அறிதல், 3) எண்ணங்களை மேம்படுத்துதல், 4) உறவுகள் மற்றும் உணர்வுகள் 5) தனி மனித மேம்பாடு 6) மாண்புமிகு அம்மா அவர்களின் அற்புதத் திட்டங்களை அகிலம் முழுவதும் எடுத்து சென்றிட 7) பேச்சாற்றலை வளர்த்தல் 8) எழுத்தாற்றலை வளர்த்தல் 9) செயல் திறனை வளர்த்தல் 10) வெற்றிக்கான திறவுகோல் 11) அம்மா அவர்களின் ஆளுமைத் திறனை அகிலம் முழுவதும் கொண்டு சென்றிட 12) கழகப் பணிகள் 13) மக்கள் பணிகள் 14) சாதனை விளக்க பிரச்சாரம் 15) மக்கள் தொடர்புக்கான பண்புகளை வளர்த்தல் ஆகிய தலைப்புகளில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன்உசேன், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் மு. தம்பிதுரை,எம்.பி., கழக அமைப்புச் செயலாளர் என். தளவாய்சுந்தரம், கழக இலக்கிய அணிச் செயலாளர் பா. வளர்மதி, கழக அமைப்புச் செயலாளர் சுதா கே. பரமசிவம், தூத்துக்குடி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சருமான கடம்பூர் செ. ராஜு, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், இந்து, சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், கழக செய்தி தொடர்பாளர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா. துரைசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் தலைமைக் கழகப் பேச்சாளர்கள், பேராசிரியர்கள் கலந்துக் கொண்டு பயிற்சி வழங்கினர்.

அம்மா பேரவைச் செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் இந்த முகாமில் பேசியதாவது:

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2011-ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் கழகத்திற்கு மாபெரும் இமாலய வெற்றி பெற்றுத் தந்துள்ளார்கள். கழக தொண்டர்களையும்,மக்களையும் இருகண்களாக நினைத்து மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.

புரட்சித் தலைவர் மறைவின் போது கழக தொண்டர்களின் எண்ணிக்கை 16 லட்சமாக இருந்தது. அதை உயர்த்தி 1 1/2 கோடிக்கு மேல், தூய தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக இன்று உருவாக்கி, எவராலும் அசைக்க முடியாத மாபெரும் எஃகு கோட்டையாக கழகத்தை உருவாக்கி உள்ளார். தற்போது அம்மா அவர்கள் நமக்கு ஒரு புனித பணியினை வழங்கி உள்ளார்கள். முதலாவதாக, அம்மாவின் மீது பற்றுக்கொண்ட இளைய வாக்காளர்களை கிராமம், கிராமமாக சென்று கண்டறிந்து, அவர்களை நாம் கழத்தில் இணைத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் 50 லட்சம் புதிய இளம் வாக்காளர்களை கழகத்தில் இணைத்திட வேண்டுமென்ற, லட்சியத்தில் நாம் செயல்படுவதோடு, இந்திய திருநாட்டில் இதுவரை இந்த வையகத்தில், செய்திடாத திட்டங்களை எல்லாம், தமிழக மக்களுக்கு வழங்கிய ஒரே தலைவி என்றால், நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மட்டுமே, நடைபெற்ற 2016 சட்டமன்ற தேர்தலில் மிகபெரிய வெற்றிப் பெற்று, கழகம் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைக்கும் உரிமையை பெற்றுத் தந்து 32 ஆண்டுகளுக்கு பிறகு, மாபெரும் வரலாற்று புகழை பெற்றுத் தந்த அம்மா அவர்கள் வாக்களித்த மக்களின் விரல் மை ஈரம் காய்வதற்குள், வாக்குறுதி நிறைவேற்றி தந்தவர் புரட்சித் தலைவி அம்மா.

இப்படி அம்மா அவர்களின் சாதனைகளையெல்லாம், தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வீடு வீடாக சென்று, அம்மா அவர்களின் சரித்திர சாதனைகளை பட்டிலிட்டு, வரும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றியினை, பெற்றே தீரவேண்டும் என்று சபதம் ஏற்று, அந்த வெற்றியை அம்மாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கும் வரை, அயராது பாடுபடுவோம் என்று, பேசினார்.

கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் மு. தம்பித்துரை, எம்.பி., பேசியதாவது:

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ள முக்கிய பணி வரும் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை கழகத்திற்கு பெற்றிட வேண்டும் என்பதாகும். இந்த வெற்றிக்கு பல்வேறு செயல்திறன்கள் உள்ளது. அதில் முக்கியமானது, கடந்த 2009, 2011, 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஒவ்வொரு பூத் வாரியாக, ஓட்டு வங்கிகளை நாம் சரிபார்க்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பூத் வாரியாக கழக தொண்டர்கள் அம்மாவின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கருணாநிதி செய்யும் தில்லு முல்லுகளை மக்களுக்கு எடுத்து கூறிட வேண்டும். மேலும், மேற்கண்ட அனைத்து தேர்தலிகளிலும், அம்மாவின் வாக்கு வங்கி ஒருபோது குறையவில்லை என்பதை குறிப்பிட தக்காகும். ஆகவே, உள்ளாட்சித் தேர்தலில், நாம் கடுமையாக களப்பணியாற்றி உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றியினை நாம் பெற வேண்டும் என்று, பேசினார்.

கழக இலக்கிய அணிச் செயலாளர் பா. வளர்மதி பேசியதாவது:

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நடைபெற்ற கூட்டத் தொடரில், எதிரி கட்சிகளுக்கு சவால் விட்டு பேசினார். ஆனால், அவர்களால் சரியான பதிலைக்கூட கூற முடியவில்லை. கச்சத் தீவு பிரச்சனையில் கருணாநிதி செய்த துரோகங்களை அம்மா அவர்கள் பட்டியலிட்டு கூறியபோது, எதிரி கட்சியினர் பதில் கூற முடியாமல், திணறினர். இதுமட்டுமல்லாமல் அம்மா அவர்கள் அனைத்து துறைகளிலும், செய்த சாதனைகளை பட்டியலிட்டு புள்ளி விவரத்துடன் கூறினார். இதுபோன்ற சட்டமன்ற கூட்டங்களிலும், தினந்தோறும் அம்மா அவர்கள் வெளியிட்டு வரும் அறிக்கைகளை, நிர்வாகிகள் நன்கு படித்து, அதை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். அம்மா அவர்கள் கூறி வருவதை, மக்களிடத்தில் எடுத்து சொன்னால் போதும், வெற்றி என்பது நமக்கு 100 சதவீதம் கிடைத்துவிடும் என்று, பேசினார்.

கழக செய்தி தொடர்பாளர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் பேசியதாவது:

அம்மா அவர்கள் செய்த சாதனைகள், இந்தியாவின் எந்த மாநிலமும் செய்தது கிடையாது. அதேபோல், கருணாநிதியை எடுத்துக் கொண்டால், அவர் மக்களுக்கு செய்த துரோகங்களை பட்டியலிட முடியாது. தன் குடும்ப நலன் ஒன்றையே பெரியதாக கருதி, தமிழகத்தின் ஜீவாதார உரிமையை தாரவார்த்து கொடுத்தவர் கருணாநிதி. இதுபோன்ற கருணாநிதி செய்யும் தில்லு-முல்லுகள், துரோகங்கள் அனைத்தையும் மக்களிடத்தில் பட்டியலிட்டு, எடுத்துக் கூறி வரும் உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு 100 சதவீத வெற்றியினை பெற்றுத் தரவேண்டும் என்று, அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்