முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த தனியார் துறை முதலீடு இன்னும் வரவில்லை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேச்சு

சனிக்கிழமை, 9 ஜூலை 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த தனியார் துறை முதலீடு இன்னும் வரவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இந்தியா கடந்த சில வருடங்களில் பொது மக்களின் முதலீடு மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளால் சிறந்த முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் ஆனால் தனியார் துறையினரால் சிறந்த முறையிலான முதலீடு என்பது இன்னும் வரவில்லை என்றும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மும்பை பங்கு சந்தை 140-வது வருடத்தினை வெற்றிகரமுடன் நிறைவு செய்ததை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கலந்து கொண்டார்.  அதன்பின் அதற்கான நினைவு தபால் தலை ஒன்றை வெளியிட்டு பேசிய அவர், அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் சாராம்சமும் முதலீட்டில் உள்ளது. அதற்குரிய வளம் எங்கு இருக்கிறதோ அங்கிருந்து கிடைக்கிறது.  பங்கு சந்தைகள் பல தலைமுறைகளாக பொருளாதாரத்திற்கான வளத்திற்கு பெரிய அளவில் உதவி புரிந்துள்ளன என்று அப்போது அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்