முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஷ்பு விமர்சனம் செய்யும் அளவுக்கு தமிழக பா.ஜ.க. நிலை இல்லை: தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, குஷ்பு விமர்சனம் செய்யும் அளவுக்கு தமிழக பிஜேபியின் நிலை இல்லை என தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கமலாலயத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடுவது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன். ஏற்கனவே 500 மதுக்கடைகளை மூடியது போல் இவற்றையும் விரைவாக மூட வேண்டும். மேலும் தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லை என்ற பூரண மதுவிலக்கு நிலையை விரைவில் உருவாக்க வேண்டும் என்று நான் தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்.ஜாகீர்நாயக் விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக வெளியிடப்படும் கருத்துக்களில் நியாயமில்லை. அவரது பேச்சுக்களை வங்கதேச அரசே தடை செய்துள்ளது. அப்படியிருக்க அவரது நடவடிக் கைகளுக்கு எதிராக செயல்பட வேண்டும் என பிஜேபி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சுவாதி கொலை வழக்கில் ஜாதி பிரச்சனையை எழுப்புவது தேவையற்றது. தமிழக பிஜேபி குறித்து குஷ்பு விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். நாங்கள் அவர்களின் செயல்பாடுகளை பற்றி மட்டுமே விமர்சித்து வருகிறோம். உட்கட்சி விவகாரத்தில் தலையிடுவதில்லை.அதுபோல அவர்களும் செயல்பட வேண்டும். குஷ்புவை விமர்சனம் செய்யும் அளவுக்கு தமிழக பிஜேபியின் நிலை இல்லை. சட்டசபை தேர்தலில் தோல்விக்காகவே இளங்கோவன் ராஜினாமா செய்திருப்பார் என்றால் அவர் அதை முன்னதாகவே செய்திருக்க வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் தேய்ந்து வருகிறது. அதனால் தான் இத்தனை நாட்கள் ஆகியும் அவர்களால் மாநில தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்