முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வீரர்களுக்கு தன்னுடைய உதவி எப்பொழுதும் உண்டு: டெண்டுல்கர் உறுதி

புதன்கிழமை, 13 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

மும்பை  - இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர், தன்னுடைய உதவி எப்பொழுதும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் என உறுதியளித்துள்ளார். ஏழை குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையான உதவிகளை செய்ய விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது, தொடர்ந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறேன். இந்திய கிரிக்கெட் அணியை தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே திறம்பட வழிநடத்திச் செல்வார்.

அனில் கும்ப்ளே மீது முழு நம்பிக்கை உள்ளது, நெருக்கடியான தருணங்களில் திறமையாக விளையாடுவது எப்படி என்பதை, அனில் கும்ளே, இந்திய வீரர்களுக்கு சொல்லித் தருவார். அனில் கும்ப்ளே உடன் சக வீரராக கிரிக்கெட் ஆடியுள்ளதால், அவரது பாசிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் தெரியும். ஏறக்குறைய 20 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடியுள்ள கும்ப்ளே, பெரும்பாலும் திறமையாக ஆடி, வெற்றி பெறுவது எப்படி என்றே சிந்தனை செய்யக்கூடிய நபர் என ப்பிட்டுள்ளார். சச்சின் உள்ளிட்டோர் அடங்கிய பிசிசிஐ தேர்வுக் குழுதான், அனில் கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்