முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியுடன் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

ஆன்டிகுவா :  மேற்கு இந்திய தீவு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியுடன் மேற்கு இந்திய தீவின் சாதனை வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆலோசனை நடத்தினார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கு இந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இந்திய அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல்டெஸ்ட் போட்டி இந்தியா- மேற்கு இந்திய தீவு அணிகள் இடையே  ஆன்டிகுவாவில் உள்ள நார்த் சவுன்ட்டில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டி நாளை முதல்(21ம்தேதி) முதல் 25ம்தேதி வரை நடக்கிறது. ஆன்டிகுவாவில் உள்ள இந்திய அணியினருடன் மேற்கு இந்திய தீவின் சாதனை பேட்ஸ் மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது இந்திய அணி வீரர்கள் கோலி, ஷிகார் தவான், அஜின்கியா ரகானே , முரளி விஜய் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ரிச்சர்ட்சுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். ரிச்சர்ட்ஸ் மேற்கு இந்திய தீவின் முன்னாள் கேப்டன் ஆவார். ரிச்சர்ட்சுடன் படம் எடுத்துக்கொண்ட தருணம் என்றைக்கும் நினைவில் இருக்கக்கூடியது. அற்புதமான வார்த்தைகள் அவரிடம் இருந்து வந்துள்ளது.அவருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினோம். அது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது என தவான் தனது சமூக வலைத்தள கணக்கில் தெரிவித்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் தனது ட்விட்டர் செய்தியில்,  விவியன் ரிச்சர்ட்சின்  தீவிர ரசிகன் .  அவர் எங்களுக்கு அளித்த ஆலோசனை  போதுமானது .அதனை என்றைக்கும் மறுக்க முடியாது என தெரிவித்து இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்