எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழகம் வெகுவேகமாக முன்னேற்றமடைந்து வருகிறது என்று சென்னையில் நேற்று நடைபெற்ற மெட்ரோ ரயில் திட்ட விழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்தார்.
வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் முதல் திட்ட நீட்டிப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அதற்கான சிறப்பு மலரை வெளியிட்டு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசினார். அப்போது அவர் பேசியதாவது.,
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றொரு மைல் கல்லை எட்டி சாதனையைப் படைத்துள்ளது. வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்- விம்கோ நகர் வரையிலான 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயிலின் முதல் கட்ட பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினேன். அப்போது, மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அப்போது, இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்குவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. எனவே, விரைந்து ஒப்புதல் வழங்கப்படும் என அவரிடம் உறுதி அளித்தேன்.
அதேசமயம், இந்தத் திட்டத்துக்கான ஒப்புதல் வழங்கும் பணிகளை மேற்கொண்டேன். எனது துறையின் மூலமாக, இந்தத் திட்டம் நிதித் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தத் துறையின் ஒப்புதல் கிடைத்து இறுதியாக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இப்போது இந்தத் திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பூமி பூஜை நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் திட்டம் குறித்த காலத்துக்குள் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.
அதிக மக்கள் தொகையுடனும், அதிகமான போக்குவரத்து வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகவும் வடசென்னை பகுதி இருக்கிறது. இதனை மனதில் கொண்டு இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, ஏழை-நடுத்தர தொழிலாளர்களுக்கு அதிக பயனை அளிக்கும். இந்தத் திட்டத்தால் வடசென்னையில் உள்ள பொதுப் போக்குவரத்து மேம்படுவதுடன், தொழிலாளர்கள் நகரின் மையப் பகுதிகளுக்கு எளிதாகச் சென்று வரவும் வழி ஏற்படும்.
முதல் கட்ட விரிவாக்கத் திட்டமானது, ரூ.3 ஆயிரத்து 70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 9.051 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும். அதில், 6.7 கிலோமீட்டர் உயர் வழித் தடமாகவும், மீதமுள்ள கிலோமீட்டர் தூரம் தரைக்குக் கீழும் அமைக்கப்படும். ஏழு ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன. அதில், ஒன்று தரைக்குக் கீழ் அமைகிறது. ரயில் பெட்டிகளை பராமரிப்பதற்காக திருவொற்றியூர்- விம்கோ நகரில் பராமரிப்புப் பணிமனை அமைக்கப்படுகிறது. சென்னையில் 45 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை அளிப்பதற்காக, ரூ.14,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தால், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், சமூக-பொருளாதார நிலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. மீதமுள்ள 34.9 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.முதல் கட்டத் திட்டத்துக்கான பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைந்து மேற்கொள்ளும் என நம்புகிறேன். இதன் மூலம், பொது மக்களுக்கு மிகச் சிறந்த பொதுப் போக்குவரத்து கிடைக்கும்.
முக்கிய நகரங்களில் ரயில்: இந்தியாவில் டெல்லி, குர்ஹான், சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஜெய்பூர், மும்பை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சென்னை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, கொச்சி, மும்பை, அகமதாபாத், நாக்பூர், லக்னோ ஆகிய நகரங்களில் மெட்ரோ கட்டுமானப் பணிகள் நடந்து வருவதுடன், 553 கிலோமீட்டருக்கு ரயில் சேவை வழங்குவதற்கான கருத்துகளும் பரிசீலனையில் உள்ளன.
மெட்ரோ ரயில் சேவை பொது மக்களின் மிகப்பெரிய விருப்பமாக உள்ளது. எனவே, இந்தத் திட்டத்துக்காக மத்திய-மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மந்த நிலை காணப்படுகிறது. இந்தியாவில் பொருளாதார நிலை சீராக சிறப்பாக உள்ளது. அதில், தமிழகம் குறிப்பிடத்தக்க மாநிலமாக இருக்கிறது. மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இதன்மூலம், இந்தியாவை வளமிக்க, வலிமைமிக்க, உறுதியான நாடாக்க முடியும். மாநிலங்கள் வளமிக்கதாக இல்லாவிட்டால், நாட்டை வளமிக்கதாக மாற்ற முடியாது. இதனாலேயே, மாநில அரசுகளுடன் இணைந்து டீம் இந்தியாவாக பணியாற்ற வேண்டுமென மத்திய அமைச்சர்களாகிய எங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார். மாநில அரசுகள் எந்தக் கட்சியைச் சேர்ந்ததாக இருந்தாலும், அவற்றையெல்லாம் மறந்து அரசியல் மாச்சர்யங்களைத் துறந்து வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி ஒன்றையே தாரக மந்திரமாக கொண்டு பணியாற்ற வேண்டுமென பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஒரே குறிக்கோள் வளர்ச்சி, விரைவான வளர்ச்சி, அனைத்திலும் வளர்ச்சி, சிறந்த நிர்வாகம் என்பதாகும். முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசில் தமிழகம் முன்னேற்றம் பெற்று வருகிறது. நான் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு மட்டுமல்லாது, வீட்டு வசதி, செய்தி-ஒலிபரப்புத் துறையின் அமைச்சராகவும் உள்ளேன் என்பதை அறிவீர்கள். எனவே, தமிழகத்துக்கு எந்தவகையான உதவிகள் அந்தத் துறையில் இருந்து தேவைப்பட்டாலும் அதைச் செய்து கொடுப்போம். வளர்ச்சி பெற்று வரும் மாநிலங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டுமென பிரதமர் வலியுறுத்தியுள்ளார். தமிழகம் அதுபோன்று வளர்ச்சி பெற்று வரும் மாநிலமாகும். அதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இப்போது நீட்டிப்புத் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளது. இந்த நிறுவனத்தின் அதிகாரிகள், தமிழக அரசு நிர்வாகத்துடன் இணைந்து நீட்டிப்புத் திட்டத்தை குறித்த காலத்துக்குள் முடிப்பார்கள் என நம்புகிறேன். இந்தத் திட்டத்தை நானும், முதல்வர் ஜெயலலிதாவும் இணைந்து தொடங்கி வைப்போம். இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.