முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

பாக்தாத் : பாக்தாத்தின் வடக்கு பகுதியில் ஒரு செக் பாயிண்டில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

சியட்டி மாவட்டத்தில் உள்ள கதிமியாவில் ஒரு நுழைவாயிலில் நேற்று காலை ஒரு தீவிரவாதி தன் உடலில் கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளான். இதில், 8 ராணுவ வீரர்களும், 2 காவலர்களும் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ராணுவ வீரர்கள் மற்றும் போலீசை குறிவைத்து இந்த தாக்குதலை தீவிரவாதிகள் அரங்கேற்றி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் இதற்கு பொறுப்பேற்கவில்லை என்றாலும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்