Idhayam Matrimony

மறைந்த "பசி" நாராயணின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் நிதி உதவி

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : வறுமையில் வாடும் மறைந்த திரைப்பட நடிகர் பசி நாராயணனின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு.,

எம்.ஜி.ஆர் நடித்த "அன்பே வா","ஆயிரத்தில் ஒருவன்" உள்ளிட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பிரபல திரைப்பட நடிகர் மறைந்த "பசி" நாராயணன் குடும்பத்தினர், அவரது மறைவுக்குப் பிறகு எவ்வித வருமானமும் இன்றி வறுமையான சூழலில் வாழ்ந்து வருவதாகவும், வாழ்வாதாரத்திற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்ற செய்தியை ஊடகங்கள் வழியாக நான் அறிந்தேன். "பசி" நாராயணன் குடும்பத்தினரின் வறுமையான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதல்வரின் பொது நிவாரணநிதியிலிருந்து "பசி" நாராயணனின் மனைவி வள்ளிக்கு ரூ.10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த 10 லட்சம் ரூபாய் "பசி" நாராயணனின் மனைவிவள்ளி பெயரில் "தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்" வைப்பு நிதியாக வைக்கப்படும். இந்த வைப்பு நிதியில் இருந்து வட்டியாக மாதந்தோறும் 8,125/- ரூபாய் வள்ளிக்கு கிடைக்கப் பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அந்த  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்