எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பாலாற்றின் குறுக்கே தடுப்பணை விவகாரத்தில், ஆந்திர அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என்றும், ஆனால் மைனாரிட்டி தி.மு.க. அரசோ அக்கறையுடன் செயல்படவில்லை என்றும் சட்டசபையில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சரமாரி குற்றம் சாட்டினார்.
தி.மு.க அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால் பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டியிருக்காது என்று சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
சட்டசபை நேற்று காலை தொடங்கியதும், எதிர்க்கட்சிதலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார். ஆந்திர மாநில அரசு அதன் எல்லையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அதன் கரையைும் உயர்த்தி கட்ட முயற்சி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது பற்றி விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்திருந்தோம். அதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டார்.
இந்த பாலாறு தடுப்பணை விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்காக நடைபெற்று வருகிறது. அதை பற்றி சபையில் பேசக்கூடாது என்று சபாநாயகர் தனபால் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பேசியதாவது.,
1892-ம் ஆண்டு மைசூர் அரசுடன் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பாலாற்றின் பாசன பகுதியாக இருக்கும் தமிழகத்திற்கு உரிமை இருக்கிறது. அந்த உரிமையை பறிக்கும் வகையில் பாலாறு குறுக்கே ஆந்திரா அரசு புதிய அணை கட்டுவதும், கரையை உயர்த்தி கட்டுவதும் கூடாது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து பேச அனுமதி கேட்டார். அவரை பேச சபாநாயகர் அழைத்தார். அவை முன்னவர் பேசுவதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவரை முழுமையாக பேச விடுங்கள் என்று அனைவரும் எழுந்து நின்று உரத்த குரல் எழுப்பி கொண்டிருந்தார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இந்த செயலை கண்டித்து சபாநாயகர் தனபால் பேசினார். அதைதொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியானார்கள். நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து பேசிய போது, தி.மு.க .உறுப்பினர்கள் 20 நிமிட நேரம் சபையை நடத்த விடாமல் கூச்சல் போடுவது கண்டனத்திற்கு உரியது என்றார். அதை தொடர்ந்து எதிர்க்கட்சிதலைவர் ஸ்டாலினை பேசும்படி சபாநாயகர் அழைத்தார்.
அப்போது ஸ்டாலின், பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவதை தடுத்து நிறுத்த அனைத்துகட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும். அனைத்து கட்சிகுழுவை அமைச்சர் தலைமையில் ஏற்படுத்தி ஆந்திர முதல்வரை சந்தித்து பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதையும், கரை உயர்த்தி கட்டுவதையும் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க என்றார். இதை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராமசாமி, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர், ஆந்திர மாநில முதல்வரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.
இந்த விவாதத்திற்கு பதிலளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது., பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போதே அணைகட்ட தொடங்கி விட்டது. அப்போது அதை தடுத்து நிறுத்த தி.மு.க. ஆட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகு இப்பொழுது ஆந்திர மாநில அரசு அதே பணியை செய்ய ஆரம்பித்து விட்டது. அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி 1.7.16 அன்று ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். தடுப்பணை உயரத்தை மேலும் உயர்த்தக் கூடாது. தடுப்பணை கரையையும் உயர்த்தக்கூடாது என்று அறிவுரை வழங்கவேண்டும் முதலமைச்சர் வலியுறுத்தி இருந்தார்.
அதையும் மீறி அவர்கள் தடுப்பணை உயரத்தை உயர்த்த முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து தமிழக தலைமை செயலாளர் மூலம் ஆந்திர தலைமை செயலாளருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுத பணித்தார். அந்த கடிதத்திலும், 1892-ம் நிறைவேற்றப்பட்ட மதராஸ்–மைசூர் மாகாண ஒப்பந்தத்தை மாற்றக்கூடாது என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதற்கும் ஆந்திர மாநில அரசு உடன்படாததால், 18.7.2016 அன்று பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டக் கூடாது என்று தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கூடாது என்று ஆந்திர அரசை தடுத்து நிறுத்தியிருந்தால், பிரச்னை இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது. இப்போது பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிய தடுப்பணை கட்டுவதற்கு தடை விதிக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் முதல்வர் ஜெயலலிதாதான். இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு இதில் தீர்வு கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.