முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் எம்.பி. அன்புச்செழியன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

திங்கட்கிழமை, 25 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : திண்டுக்கல் முன்னாள் எம்.பி. அன்புச்செழியன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது குறித்து முதல்வரும், அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு.,

திண்டுக்கல் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பெரியகுளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்புசெழியன் உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன், அன்பு சகோதரர் அன்புசெழியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க நிர்வாகிகள் மறைவுக்கு இரங்கல் 

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது.,

திண்டுக்கல் மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் அய்யர் என்கிற அய்யாசாமி, தருமபுரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் வி.பி. பழனி, சிவகங்கை மாவட்ட மருத்துவ அணி துணைச்செயலாளர் எஸ்.பி. ஜவஹர் என்கிற ராஜா தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியக்கழக பொருளாளர் ஏ.சேகர், கோவை புறநகர் மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம், கோவிந்தாபுரம் ஊராட்சிக்கழக செயலாளர் ஆர்.சின்னசாமி ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத்துயரம் அடைந்தேன்.

அன்புசகோதரர்கள் அய்யாசாமி, பழனி, ராஜா, சேகர் மற்றும் சின்னசாமி, ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்