முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சேலம்  - காவிரி கரையோர மக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாட வசதியாக மேட்டூர் அணையில் இருந்து மேலும் கூடுதலாக 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.  வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி ஆடிபெருக்கு வருவதையொட்டி மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஜெயலலிதா, ஆடிப்பெருக்கு விழாவில் பொதுமக்கள் புனித நீராட வசதியாக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார்.  இதையடுத்து, சேலம் ஆட்சியர் வா.சம்பத் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்களும் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்