முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல்கலாம் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி சரத்குமார் மரியாதை

புதன்கிழமை, 27 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாகடர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் நிறுவனத்தலைவர் ஆர்.சரத்குமார் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். உடன் மாநில நிர்வாகிகள் பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், சென்னை மண்டலச் செயலாளர் எம்.ஏ.சேவியர், இளைஞரணி மற்றும் மாணவரணி செயலாளர் சி.வி.சாமுவேல் மேத்யூ, வர்த்தகரணி செயலாளர் கே.ஜே.நாதன், தலைமை நிலையச் செயலாளர் அக்வின் நோயல், மகளிரணி துணைச் செயலாளர் எம்.பாகீரதி, கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் எம்.ராஜேந்திரன்,வழக்கறிஞரணி துணைச் செயலாளர் பூவை செல்வம், சென்னை மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி, ஒன்றியம், பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள இயக்கத் தோழர்கள் அனைவரும் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் நினைவஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்