எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - தலித் பிரிவினர் அல்லது பெண்களுக்கு எதிரான தாக்குதலை எந்தவகையிலும் ‘நாங்கள் நியாயப்படுத்தவில்லை’ என்று கூறிஉள்ள மத்திய அரசு, பெண்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய பிரதேச அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறிஉள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் பசு இறைச்சி விற்பனை செய்ததாக தாக்கப்பட்ட விவகாரம் நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. மாநிலங்களவை தொடங்கியதும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, குஜராத் மாநிலத்தில் தலித் வாலிபர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில் பசு இறைச்சி விற்பனை செய்ததாக இரு பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று இப்பிரச்சனையை எழுப்பினார்.
பா.ஜனதா ஒருபுறம் பெண்கள் குழந்தைகளை பாதுகாப்பது குறித்தும், அவர்கள் கவுரவிக்கப்படவேண்டியது குறித்தும் பேசுகிறது. மறுபுறம் அவர்கள் மீது குண்டர்களை ஏவிவிடுகிறது என்று குற்றம் சாட்டினார். குஜராத் மாநிலத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பா.ஜனதா ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. பசு பாதுகாப்பு என்ற தலித் சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பதில் அளிக்கவேண்டும் என்று மாயாவதி கூறினார். மாயாவதி பேச்சை முடித்ததும் அவருடைய கட்சியின் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அவர்களுக்கு காங்கிரசும் ஆதரவு கொடுத்தது. “தலித் பிரிவினர்களுக்கு எதிரான அரசை சகித்துக் கொள்ளமுடியாது,” என்று கோஷம் எழுப்பினர்.
பசுவை பாதுகாப்பதாக கூறி தலித் பிரிவினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஆனந்த் சர்மா வலியுறுத்தினார். மாநிலங்களவை துணை சபாநாயகர் பி.ஜே குரியன் பேசுகையில், பூஜ்ஜிய நேரத்தில் 13 உறுப்பினர்கள் நோட்டீஸ் வழங்கிஉள்ளனர், இது சரியானது கிடையாது. இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றால் அவர்கள் நோட்டீஸ் வழங்கவேண்டும்,” என்று கூறினார். மாயாவதிடம் பேசிய குரியன் நீங்கள் உங்களுடைய இருக்கைக்கு செல்லுங்கள், அரசை பதில் அளிக்க நான் கூறுவேன்,” என்றார். காங்கிரஸ் உறுப்பினர்களையும் இருக்கைக்கு செல்ல கேட்டுக் கொள்ள குலாம் நபி ஆசாத்திடம் கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆசாத் பேசுகையில், பசுவை பாதுகாப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் கிடையாது ஆனால் பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்கள் குறிவைக்கப்படுவதற்கு நாங்கள் எதிரானவர்கள்,என்று கூறினார். இதனையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கைக்கு சென்றனர். மத்திய மந்திரி நக்வி பதில் அளித்து பேசினார். எந்த ஒரு வடிவத்திலும் மற்றும் எந்த ஒரு மாநிலத்திலும் வன்முறை என்பது கண்டனத்திற்குரியது. தலித் அல்லது பெண்களுக்கு எதிரான தாக்குதலை ’நாங்கள் நியாயப்படுத்தவில்லை’ தேசம் சட்டத்தின்படி ஆட்சி செய்யப்படுகிறது,
படைகளின் வழியாக கிடையாது. மத்திய பிரதேச மாநில அரசு இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுத்து உள்ளது, வழக்குப்பதிவு செய்து உள்ளது. வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் தலித் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசு பணியாற்றி வருகிறது என்றார். மேலும், எதிர்க்கட்சிகள் இதுபோன்ற உணர்வுபூர்வமான விவகாரங்களில் அரசியல் செய்யக் கூடாது, மதநல்லிணக்கம் மற்றும் நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது என்று நக்வி வலியுறுத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள