முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூரில் கனமழைக்கு பலியான நால்வரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 27 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஓசூரில்  பெய்த கனமழை காரணமாக உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ 4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் 26.ம்தேதி 14 செ.மீஅளவுக்கு பெய்த கன மழையின் காரணமாக மூக்காண்டப்பள்ளி அருகேரயில்வே பாலத்தின் கீழ் மழை நீர் புகுந்ததால், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தசேகர் என்பவரின் மனைவி வனிதா, மகள் தஷ்வினிமற்றும் . கணேசன் என்பவரின் மகன் தி. நந்தகுமார் ஆகியோர்\வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்துநான் மிகவும் துயரம் அடைந்தேன்.

கன மழையின் காரணமாக உயிரிழந்த இந்த மூன்று பேரின்குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.கன மழையின் காரணமாக உயிரிழந்த வனிதா, தஷ்வினிமற்றும்  . நந்தகுமார் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம்ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்