முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் போல் புர்கா அணிந்து தப்பிக்க முயன்ற ஐ.எஸ் அமைப்பினர்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

பாக்தாத்  - ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை பிடித்து அதனை இஸ்லாமிய நாடாக ஐ.எஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து நகரங்களை மீட்க அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியா ஜனநாயக படைகள் செயல்பட்டு வருகின்றன. தொடர் தாக்குதலினால் ஐ.எஸ் அமைப்பினர் ஆங்காங்கே சிதறி ஓடி வருகின்றனர்.

கடந்த வாரம் லெபோ மாகாணத்தில் மேன்பிஜ் நகரில்  சிரியா ஜனநாயக படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது 3 முஸ்லீம் பெண்கள் புர்கா அணிந்து நகருக்குள் நுழைய முயன்று உள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த படையினர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் அனைவரும் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஆண்கள் என்பது தெரிவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்