முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் அது புரளி என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னை தேனாம் பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்சுக்கான அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இன்று மதியம் 12. 30 மணி அளவில் தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர் அலுவலகத்துக்குள் வெடி குண்டு வத்துள்ளதாகவும், இன்னும் சில மணி நேரத்தில் அது வெடிக்கும் என்றும் கூறி தொலை பேசி துண்டித்து விட்டார்.

இது குறித்து வரப்பட்ட புகார் தொடர்பாக சம்பவ இடத்துக்கு வெடி குண்டு நிபுணர்களுடன் வந்த போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் அது புரளி என்று தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். வெடிகுண்டு புரளி சம்பவத்தால் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும் அதிர்ச்சி அடைந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்