முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் : மீண்டும் கோருகிறது பாகிஸ்தான்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

இஸ்லமாபாத்  - ஐநா  கண்காணிப்பின் கீழ் பாரபட்சமற்ற முறையில் காஷ்மீரில் மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நபீஸ் சகாரியா கூறியதாக அந்நாட்டு வானொலி  இந்த செய்தியை ஒலிபரப்பியது. அந்த வானொலி செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:-

“ காஷ்மீரில் ஹூரியத் தலைவர்கள் கைது செய்யப்படுவதற்கு நபீஸ் சகாரியா கவலை தெரிவித்தார். காஷ்மீரில் தொடர்ந்து மீறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் வருத்தம் தெரிவித்த  சகாரியா, காஷ்மீரில் நிலவும் கொடுமைகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும்,காஷ்மீரில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பின் கீழ், பாரபட்சமற்ற முறையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தெரிவித்த சகாரியா அனைத்து சர்வதேச கூட்டங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை பகிஸ்தான் எழுப்பும் எனவும் தெரிவித்தார்” இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago