முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓடுபாதையில் சென்ற போது விமானத்தில் திடீர் கோளாறு

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டது. பயணிகள் உள்ளே அமர்ந்த நிலையிலேயே என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு விமான கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை 6.15 மணிக்கு 122 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.

விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்திவிட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக இழுவை வண்டி மூலம் விமானம் பின்னோக்கி இழுக்கப்பட்டு புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.பின்னர் பயணிகள் உள்ளே அமர்ந்த நிலையிலேயே என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு விமான கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.பின்னர் எந்திர கோளாறு சரி செய்யப்பட்டு காலை 8.25 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. விமானி சரியான நேரத்தில் எந்திர கோளாறை கண்டுபிடித்ததால் 122 பயணிகளும் உயிர் தப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்