முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் கைது

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

சாண்டிகோ  - கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டிகோவில் காவலர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் அண்மைக்காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் இத்தகைய துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருவது கவலை அளிப்பதாக அந்நாட்டு அதிபர் ஒபாமா கவலை தெரிவித்து இருந்தார். இருப்பினும்,இது போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறுவது அங்கு வாடிக்கையான ஒன்றாக நடைபெற்று வருகிறது.  

இந்த நிலையில்,கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டிகோவில் காவலர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் காவலர்கள் இருவர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். காவலர்களின் நிலை குறித்து தகவல் எதுவும் இல்லை. 

 தாக்குதல் நடத்திய நபர் ஒருவரா அல்லது குழுவினரா என்பது குறித்து தெரியவில்லை. சாண்டிகோ மற்றும் அருகாமையில் உள்ள இடங்களில் போலீசார் சந்தேக நபர்களை பிடிப்பதற்காக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்