எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - கனிம வள விற்பனையை அரசே ஏற்கும் என்று அறிவித்திருப்பதால் அரசுக்கு கூடுதல் வருவாய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் விவாதங்களுக்கு நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அளித்த பதில் வருமாறு., பெட்ரோல் விலை குறைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள வரி இழப்பைச் சமாளிக்க, இந்த அரசால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உறுப்பினர் ஒரு கேள்வி எழுப்பினார். நடப்பாண்டில், பொருளாதார தேக்கநிலை மாறி, பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க பொதுவான அறிகுறிகள் தென்படுகின்றன. அதனால்தான் உற்பத்தி துறையின் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. நம் மாநிலத்தில் அரசும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் தொலைநோக்குத் திட்டம் 2023-ன் படி, பல்வேறு கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டும், தொடங்கப்பட உள்ள நிலையிலும் உள்ளன.
இவை பெரும்பாலும் அரசு மூலதனமாகவும், அரசு-தனியார் பங்களிப்புடனும் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து, தனியார் முதலீடுகளும் ஈர்க்கப்பட்டு வருகின்றன. சிறு, குறு தொழில்களிலும், போடப்பட்ட பல ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் பொருளாதார சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன எனக் கருதுகிறோம். அதன் அடிப்படையில்தான், வரி வருவாயிலும், 2015-2016-ம் ஆண்டு கணக்குப்படியான வருவாயில் சுமார் 12.50 சதவீத வளர்ச்சியைச் சேர்த்து, 2016-2017-ல் வரி வருவாய் கணிக்கப்பட்டுள்ளது. இது மேலும் உயருமேயானால், அந்த கூடுதல் நிதி ஆதாரங்கள் மூலம், வருவாய் பற்றாக்குறை குறையும்.
வருவாயை அதிகரிக்க, அரசே கனிம வளத்தை பிரித்து விற்கும் பொறுப்பை ஏற்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டு, அது சம்பந்தமான அறிவிப்பு, ஆளுநர் உரையிலும் இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளிலும், கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இது ஒருபுறம் இருக்க, வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க, செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் அரசு தொடர்ந்து நல்ல பல நடவடிக்கை எடுக்கும். கடன் அளவு 2.52 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது என்றும், இதனால் அதிகரிக்கும் வட்டி சுமையைச் சமாளிக்க அரசு என்ன செய்யப்போகிறது எனவும், ஒரு உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் 6,353 கோடி ரூபாய் கடனை, அரசு ஏற்றுக்கொண்டதன் காரணமாகவும், கடன் அளவும், வட்டிச் சுமையும் அதிகரித்துள்ளது.
எனினும், இது நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமைச் சட்டத்தின் வரையறைக்குள் இருப்பதால், அரசுக்கு கடனையும், வட்டியையும் செலுத்தும் திறன் உள்ளது என்றும், அதனை தவணை தவறாமல் செலுத்தி வருகின்றது என்றும், ஏற்கெனவே தெளிவுபடுத்தினேன்.
கடனைக் குறைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்து இல்லை. ஆனால் தற்போதைய பொருளாதார மந்த நிலையில், மாநில அரசு கடன் பெற்றுத் தான் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்ய வேண்டியுள்ளது. வருங்காலத்தில் இத்தகைய நிலை மாறும் என்று நான் நம்புகிறேன். மாநிலங்களுக்கான நிதி பகிர்வின் அளவு, மத்திய அரசின் வரி வருவாயில் 32 சதவீதத்திலிருந்து, 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால் அதே வேளையில், எட்டு மத்திய அரசின் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. பல்வேறு மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதி பகிர்வு முறையில், மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. உதாரணமாக, தேசிய வேளான் திட்டத்தில் 100 சதவீதம் மத்திய அரசு மானியம் என்று இருந்ததை, 60 சதவீதமாகக் குறைத்து, மீதமுள்ள 40 சதவீதத்தை, மாநில அரசே ஏற்க நேரிட்டது. ஊரக வீட்டு வசதி திட்டத்தில், மத்திய-மாநில அரசின் பங்கு 75:25 ஆக இருந்தது, 60:40 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பல திட்டங்களில், மத்திய அரசின் பங்கு குறைக்கப்பட்டுள்ளதால், அதை ஈடு செய்ய, மாநில அரசு கூடுதல் நிதிச் சுமையை ஏற்க நேரிட்டது. இந்த மாற்றங்களால் மாநில அரசுக்கு, ஆண்டுக்கு கூடுதலாக 2,600 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மத்திய அரசின் முக்கிய திட்டங்களான தேசிய ஊரக குடிநீர் திட்டம், தேசிய வேளான் வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்புத் திட்டம் போன்ற திட்டங்களுக்கான மத்திய அரசின் ஒட்டுமொத்த நிதி குறைக்கப்பட்டுவிட்டது. உதாரணமாக, தேசிய ஊரகக் குடிநீர் திட்டத்திற்கு, 2014-2015 ஆம் ஆண்டில், இந்தியா முழுமைக்கும் மத்திய அரசு திருத்த மதிப்பீடுகளில் ஒதுக்கிய நிதி, 10,890 கோடி ரூபாய். ஆனால் 2015-2016-ம் ஆண்டில் திருத்த மதிப்பீடுகளில், இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 4,262 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேசிய வேளான் வளர்ச்சித் திட்டத்திற்கு, நாட்டின் முழுமைக்கும் 2014-2015-ம் ஆண்டில் ஒதுக்கிய நிதி 9,954 கோடி ரூபாய்.
அதே சமயத்தில் 2015-2016-ம் ஆண்டில், நாடு முழுமைக்கும் இத்திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி 4,500 கோடி ரூபாய். இந்தத் திட்டங்களில், மத்திய அரசின் ஒதுக்கீடு குறைந்ததால், தமிழ்நாட்டிற்கு கிடைத்து வந்த ஒதுக்கீடும் குறைந்துவிட்டது. எனவே, இந்த திட்டங்களை, மாநில அரசு தொய்வின்றி, தொடர்ந்து செயல்படுத்திட, தனது நிதி ஆதாரங்களை கூடுதலாகச் செலவிட வேண்டியுள்ளது. மத்திய நிதி பகிர்வில், 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்திய அதேவேளையில், மாநிலங்களுக்கு இடையேயான நிதி பகிர்வில் தமிழ்நாட்டிற்கான பங்கு, பொது வரியில் 4.969 சதவீதத்திலிருந்து, 4.023 சதவீதமாகவும், சேவை வரியில் 5.047 சதவீதத்திலிருந்து, 4.104 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், 42 சதவீதம் உயர்த்தியதில், கூடுதலாக தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு கிடைத்திருக்க வேண்டிய 6000 கோடி ரூபாய் நிதி, தமிழ்நாட்டிற்கு கிடைக்க வழியில்லாமல் போய்விட்டது. இதை மத்திய அரசு குறைத்துவிட்டதாக குறை சொல்லவில்லை. இந்த மாற்றங்கள், 14 வது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசு எடுத்த முடிவு.
இந்த முடிவால் தமிழ்நாடு போன்ற, ஒரு சில மாநிலங்கள்தான் பாதிக்கப்பட்டன. அதனால் தான், மத்திய அரசிடம் இந்த இழப்பினை ஈடு செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதைக் கருத்தில் கொண்டு, 2015-2016-ம் ஆண்டில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு, நிதி வழங்கும்போது, 552 கோடி ரூபாயை மத்திய அரசும் வழங்கியது. 14-வது நிதிக்குழு பரிந்துரைத்த நிதிப் பகிர்வால், பல மாநிலங்கள் பயன் பெற்றாலும், தமிழ்நாடு போன்ற ஒரு சில மாநிலங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிட்டன என்பது உண்மை. நமது மாநிலம் தற்போது சந்தித்து வரும் நிதி பற்றாக்குறைக்கு இதுவும் ஒரு காரணம் என்பதை மாமன்றத்திற்குத் தெரிவிக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டிற்கு மத்திய வரி பகிர்வின் மூலம் 2014-2015-ம் ஆண்டில் கிடைத்த வரி அளவு 16,824 கோடி ரூபாயாகவும், 2015-2016-ம் ஆண்டில் 20,353 கோடி ரூபாயாகவும் உள்ளது.
ஆனால், மத்திய அரசின் நிதி பகிர்வில், 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தியதன் அடிப்படையில், நமக்கு ஏற்கெனவே கிடைத்து வந்த பகிர்வின் அளவு கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், தமிழ்நாட்டிற்கு 26,000 கோடி ரூபாய், அதாவது கூடுதலாக 6,000 கோடி ரூபாய் கிடைத்திருக்கும். அதைத்தான் நாம் நிதி இழப்பாகக் கருதுகிறோம் என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.