எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - அவையை நடத்த விடாமல் தன்னை ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதாக தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் குற்றம்சாட்டியுள்ளார். தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து அவைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் தி.மு.க உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். சட்டசபையில் நேற்று முன்தினம் ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க உறுப்பினர்கள் பெரும் ரகளையில் ஈடுப்பட்டனர். அப்போது சபையை அமைதியாக நடத்தும் வகையில், அமைச்சர் கூறிய கருத்தை பத்திரிகைகள் செய்தியாக வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டு, அதை பற்றி நாளை (இன்று) தீா்ப்பளிப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியது.
நிதிநிலை அறிக்கை குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய விவாதங்களுக்கு பதிலளிக்க நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தயார் நிலையில் இருந்தார். அப்போது திடீரென எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்தார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு குறித்து இப்போதே தீர்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுபற்றி தனது தீர்ப்பை பின்னர் வெளியிடுவதாக சபாநாயகர் அறிவித்தார். அதற்கு தி.மு.க.,வினர் உடன்படவில்லை. இப்போதே வெளியிட வேண்டும் என்று கேட்டு சபாநாயகருக்கு நிர்ப்பந்தம் கொடுத்தனர். ஆனால் சபாநாயகர் அதற்கு இணங்கவில்லை. இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களோடு காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பில் ஈடுப்பட்டனர்.
தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக்கட்சியினரின் செயலுக்கு சட்டபேரவையில் சபாநாயகர் தனபால் கடும் கண்டனம் தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது., சட்டசபையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து நாளை தீர்ப்பு சொல்கிறேன் என்று தெரிவித்திருந்தேன். அது தொடர்பான தீர்ப்பை இன்று வழங்க உள்ளேன். அவை தொடங்கிய உடனேயே தீர்ப்பை வழங்க வேண்டும் என்று தி.மு.க உறுப்பினர்கள் வலியுறுத்த முடியாது என்று பலமுறை அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர்கள் அவையை அவமதிப்பு செய்யும் வகையிலேயே நடந்து கொள்கின்றனர்.
என்னை இந்த அவையை நடத்த விடாமல் தொடர்ந்து குந்தகம் விளைவிக்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க எம்.எல்ஏ.க்கள் முன்னிலையிலேயே அக்கட்சியை சேர்ந்த அன்பழகன் என்னை ஒருமையில் பேசினார். நேற்று எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர் அருகிலேயே நின்று கொண்டு தி.மு.க உறுப்பினர் பொன்முடி என்னை ஒருமையிலும், ஏக வசனத்திலும் பேசினார். அக்கட்சியை சேர்ந்த ரங்கநாதன், ஜெ.அன்பழகன் ஆகியோர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையை மீறி அநாகரீகமான முறையில் என்னை நோக்கி சைகை செய்தனர். அமைச்சர்கள் பதிலளிக்கும் போது அவர்களை விமர்சிப்பதும், கேலி, கிண்டல் செய்வதுமாக தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் நடந்து கொள்கிறார்கள். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நான் எவ்வளவோ பொறுமையாக நடந்து கொள்கிறேன். என்னை சபாநாயகராக தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்திய போது முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். துலாகோள் போல தராசு முள் போல நடுநிலை தவறாமல் இந்த அவையை நடத்த வேண்டும் என்று கூறினார். அதை நான் சிரமேற்கொண்டு பணியாற்றி வருகிறேன். ஒரு மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. தனிப்பட்ட எனக்கு எந்த மதிப்பும், மரியாதையும் தர வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் ஒரு பேரவை தலைவர் என்கிற அந்தஸ்திற்கு மரியாதை தந்தே ஆக வேண்டும். ஆனால் அதை மதிக்காமல் ஒருமையில் தரக்குறைவாக பேசுகின்றார்கள்.
என்னை வற்புறுத்தி, நிர்ப்பந்தப்படுத்தி அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெற நினைக்கிறார்கள். நான் எப்போதும் அனைவருக்கும் சமமான முறையிலேயே நடந்து கொண்டு வருகிறேன். அவையின் நடவடிக்கைகள் சூடாகும் நேரத்தில் நான் ஆளுங்கட்சி உறுப்பினர்களை பார்த்து அமருங்கள் என்றால் உடனே அமைதியாக அமர்ந்து விடுகிறார்கள். அம்மா இட்ட கட்டளையின்படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஆனால் தி.மு.க.வினரை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரே தூண்டி விடுகிறார்கள். அவர்கள் அவையை உதாசீனப்படுத்துகிறார்கள். எந்த விதிமுறையையும் முறையாக பின்பற்றுவதில்லை. அவையை ஜனநாயக முறையில் நான் நடத்த முடியாமல் நிர்ப்பந்தம் செய்கிறார்கள்.
நான் இன்று நிச்சயம் தீர்ப்பு சொல்கிறேன் என்று சொன்ன நிலையிலும் அதை ஒப்பு கொள்ளாமல் அவர்கள் வெளியேறி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவை விதியினை பயன்படுத்தி தக்க நடவடிக்கை எடுப்பேன். முதலமைச்சர் எப்படி தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க பாடுபடுகிறார்களோ அதே போல இந்தியாவிலேயே எல்லா சட்ட சபைகளுக்கும் முன்மாதிரியான சட்டசபையாக ஆக்கும் பொறுப்பை நான் நிறைவேற்றுவேன். தி.மு.க.வினரின் செயலுக்கு மீண்டும் என் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு சபாநாயகர் தனபால் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.