முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிர மாநிலத்தில் கட்டிட விபத்தில் 10 தொழிலாளர் பலி

சனிக்கிழமை, 30 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புனே  - மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் கட்டிட ஸ்லாப் இடிந்து விழுந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.  புனே நகரின் பலேவாடி பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் பலமாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு 13 தொழிலாளர்கள் 14-வது மாடியில் கட்டுமானப் பணியில் ஈடு பட்டிருந்தனர்.

அப்போது அவர்கள் மீது திடீரென ஸ்லாப் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலும் 2 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் உரிமையாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். புனே மாநகர மேயர் பிரசாந்த் ஜகதாப் கூறும்போது,  “வேலை நடந்த இடத்தில் ஏன் பாதுகாப்பு வலை கட்டப்படவில்லை போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. அனைத்து கட்டு மானப் பணிகளிலும் பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படுகின்றனவா என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்