முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.64½ லட்சம் வருமானம்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2016      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை : மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து சென்ற வண்ணம் உள்ளனர்.

பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவிலில் பல்வேறு இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் பணம், தங்க நகை, டாலர்களை காணிக்கையாக போட்டு வருகிறார்கள். இக்கோவிலில் உண்ண உண்டியல் ஒவ்வொரு மாதமும் திறக்கப்பட்டு எண்ணுவது வழக்கம்.

இந்நிலையில் கோவிலில் உள்ள அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் ரூ.64 லட்சத்து 622 ஆயிரமும், 435 கிராம் தங்க பொருட்களும், 745 கிராம் வெள்ளி பொருட்களும், 732 வெளிநாட்டு டாலர்களும் கிடைத்தது.

கோவில் நிர்வாக அதிகாரி நடராஜன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இப்பணியில் பக்தர் பேரவையினர் மற்றும் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்