முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் வழியில் நிலச்சரிவு 4 பக்தர்கள் பலி

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2016      ஆன்மிகம்
Image Unavailable

ஜம்மு  - காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் வ்ழியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் யாத்திரை சென்ற 4 பக்தர்கள் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர். காஷ்மீரில் புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில் அங்கு தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள அர்த்குவாரி கோயில் அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் புனித யாத்திரையாக சென்ற 4 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கி பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  நிலச்சரிவால் படுகாயம் அடைந்தவர்கள் மாதா வைஷ்ணவ தேவி நாராயணா பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்