முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைவர் இல்லாமல் நடந்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தலைவர் இல்லாமல் நடந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்து 2 மாதம் ஆகிறது. இதுவரை புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால் கட்சி நிகழ்ச்சிகள் தேக்கமடைந்துள்ளன. நிர்வாகிகளும், தொண்டர்களும் எந்தவிதமான வழி காட்டுதலும், அறிவிப்பும் இல்லாமல் சோர்ந்துபோய் உள்ளனர். வருகிற 15-ந்தேதி சுதந்திர தினம் வருகிறது. அன்றைய தினத்தில் சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம். காங்கிரஸ் சேவாதள தொண்டர்கள் அணிவகுப்பு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அதேபோல் 20-ந்தேதி ராஜீவ்காந்தி பிறந்தநாளும் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த 2 விழாக்களும் நெருங்கியுள்ள நிலையில் தலைவர் இல்லாதால் நிகழ்ச்சி ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் சென்னையில் உள்ள மாநில நிர்வாகிகள் சிலர் ஒன்றுகூடி தலைவர் இல்லாமலேயே கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றி ஆலோசித்தனர். இதில் மாநில பொதுச் செயலாளர்கள் கே.சி.சிரஞ்சீவி, சி.டி.மெய்யப்பன், செல்வம், விஷ்ணுபிரசாத், தணிகாசலம், கீழானூர் ராஜேந்திரன், இதயத்துல்லா மற்றும் சுரேஷ்பாபு, பூவை ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ப.சிதம்பரம் மற்றும் இளங்கோவன் ஆதரவு நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. தலைவர் இல்லாமல் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்