எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலின் உருவபொம்மை எரிப்பு மற்றும் சட்டசபை வளாகத்தில் தி.மு.க உறுப்பினர்கள் நடத்திய தர்ணா போராட்டம், தி.மு.க.வினர் நடத்திய போட்டி சட்டசபை கூட்டம் போன்ற செயல்களுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
15-வது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நாளிலிருந்தே தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் திட்டமிட்டு ரகளை செய்து வருகிறார்கள். அன்றாடம் சபைக்கு வருவது, ஏதேனும் ஒரு பிரச்சினையை மையமாக வைத்து வெளிநடப்பு செய்வது அல்லது சபைக்குள்ளேயே அமளியில் ஈடுபடுவது போன்ற செயல்களில் தி.மு.க. உறுப்பினர்கள் திட்டமிட்டு ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், சில சமயங்களில் எச்சரிக்கை விடுத்தும்கூட தி.மு.க. உறுப்பினர்கள் அதை பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, சபையின் விதிகளை மீறி செயல்பட்டு அவையின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்தாக தி.மு.க. உறுப்பினர்கள் ஒரு வாரம் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
அதன்பிறகும் கூட தி.மு.க. உறுப்பினர்கள் தங்களது அநாகரீக செயல்களை கைவிடவில்லை. பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்துவது, போட்டி சட்டமன்றம் கூட்டம் நடத்துவது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சபாநாயகர் தனபாலின் உருவபொம்மைகளும் சில இடங்களில் எரிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தி.மு.க. உறுப்பினர்களின் அராஜக செயல்களுக்கு தமிழக தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சி தலைவர்களான சே.கு.தமிழரசன், தனியரசு, கருணாஸ் எம்.எல்.ஏ., ஷேக் தாவூத் போன்ற தலைவர்கள் தி.மு.க. உறுப்பினர்களின் செயல்களை கடுமையாக கண்டித்துள்ளனர். அவர்களது செயல்கள் சட்டசபையின் மாண்புக்கு எதிரானது என்று அனைத்து தலைவர்களும் கூறியுள்ளனர்.
வைகோ கண்டனம்:
சபாநாயகர் தனபாலின் கொடும் பாவியை எரித்த தி.மு.க.வினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்ககூட்டத்தில் வைகோ பேசியதாவது.,
சட்டமன்ற பேரவை தலைவரின் கொடும்பாவியை எரித்த செயல் வெட்கப்பட வேண்டிய செயல். தி.மு.க மேலிடம் அதை கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. தி.மு.க. தலைமை இதுபோன்ற செயல்களை கண்டிக்க வேண்டாமா? அதற்கு மாறாக கொடும்பாவி எரித்த தி.மு.க.,வினர் கைது என்ற செய்தியை மட்டும் தங்கள் பத்திரிக்கையில் பெரிய செய்தியாக வெளியிட்டுள்ளனர். நானும் பாராளுமன்றத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். இது போன்ற நிகழ்வுகளை கேட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழிசை செளந்தரராஜன்:
சட்டசபை வளாகத்தில் தற்போது நடக்கும் நிகழ்ச்சிகள் கவலை அளிப்பதாக உள்ளது. சட்டசபை தலைவரின் உருவபொம்மை எரிப்பது கண்டனத்துக்குரியது. சட்டசபை வளாகத்திற்குள்ளேயே மாதிரி சட்டசபை கூட்டத்தை கூட்டி, அதை நாடகமாக நடித்து காட்டுவது நடைமுறையில் ஏற்றுக்கொள்ள முடியாதது. குறிப்பாக ஸ்டாலின் அதில் பங்கேற்ப்பது சரியல்ல. பிரச்சினைகளை எழுப்புவதற்காக சட்டசபைக்கு வரக்கூடாது. வழிநடத்தும் தலைவராகத்தான் எதிர்கட்சி தலைவர் இருக்கவேண்டுமே தவிர, வெளிநடத்தும் தலைவராக இருக்கக்கூடாது. என்று தமிழிசை வேதனையோடு தெரிவித்தார்.
இதே கருத்தை கருணாஸ் எம்.எல்.ஏ., தனியரசு எம்.எல்.ஏ. மற்றும் ஷேக் தாவூத் போன்ற தலைவர்களும் வலியுறுத்தி கூறியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.