முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ளார்: ஐக்கிய நாடுகள் சபை உறுதி

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

ஐக்கிய நாடுகள் சபை,  நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ளார். அவரது 6முகவரி அந்த நாட்டில் இருப்பதை உலக அமைப்பு உறுதி செய்திருக்கிறது.

மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள். இந்த சதி வேலைக்கு காரணமான இருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் ஆதரவுடன் அங்கு தாவூத் இப்ராகிம் பதுங்கி இருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார்.

தாவூத் இப்ராகிம் இருப்பிடமாக 9 முகவரிகளை இந்தியா அளித்திருந்தது. இந்த 3 முகவரிகள் தவறானவை. பாகிஸ்தானில் உள்ள இதர 6முகவரிகளில்தான் தாவூத் இப்ராகிம் உள்ளார் என ஐக்கிய நாடுகள் சபை உறுதி படுத்தியது. தாவூத் இப்ராகிமுக்கு பாகிஸ்தான் அரசின் உளவு அமைப்பு ஆதரவு அளித்து வருவதும தெரிய வந்துள்ளது.அவரை உலக அமைப்பு சர்வ தேச தீவிரவாதியாகவும் அறிவித்தது. அவர் வெளிநாடுகளில் பயணம் செய்யவும் தடை விதித்தது. தாவூத் இப்ராகிமை கைது செய்து இந்தியா கொண்டு வருவதைற்கு மத்திய அரசு சர்வதேச போலீஸ் உதவியையையும் நாடியது.  தாவூத் இப்ராகிமின் புதிய வீடு கராச்சியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ வீடு அருகில் உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மும்பையில் பல குற்றங்களை செய்வதற்கு அங்குள்ள சில போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்ந்து சம்பளம் அளித்து வந்ததை மற்றொரு நிழல் உலக தாதாவான சோட்டா ராஜன் தெரிவித்தார்.

அவர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு சிறையில் உள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையின் போது மும்பையில் சில உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் , தாவூத் இப்ராகிமுக்கும் உள்ள தொடர்பை சோட்டா ராஜன்  வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.  பாகிஸ்தான் ஆதரவுடன் அந்த நாட்டில் சொகுசாக பதுங்கி இருக்கும் தாவூத் இப்ராகிமை இந்தியாவிற்கு கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என இந்திய அரசு உறுதியுடன் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்