முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி நில நடுக்கம்: பிரதமர் மோடி வேதனை

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  இந்தாலி நிலநடுக்கத்தில் ஏற்பட்ட அதிக உயிரிழப்பு குறித்து பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.

இத்தாலியில் நேற்று காலை 6.2 ரிக்டர் அளவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தில் 38 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

இந்த இயற்கை பேரிடர் இழப்பு குறித்து பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட ட்விட்டர் செய்தியில்,
 இத்தாலி நில நடுக்கத்தில்  உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவிக்கறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.என தெரிவித்துள்ளார்.
 மத்திய இத்தாலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் இறப்பு  எண்ணிக்கை மேலும்  அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் பல மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர் . அவர்கள் நிலைமை என்ன என்பது தெரியவில்லை என இத்தாலியின் அவசர நிலை பிரிவின் தலைவர் இம்மா கோலட்டா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்