முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர் மூழ்கி கப்பலின் ரகசிய தகவல்கள் வெளியானது குறித்து விசாரணைக்கு உத்தரவு

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி, பிரெஞ்சு நிறுவனத்துடன் இணைந்து இந்திய கடற்படை 6 நீர் மூழ்கி கப்பல்களை தயாரித்து வருகிறது. இந்த அதி நவீன நீர் மூழ்கி கப்பல்கள் குறித்து, 22ஆயிரம் பக்கம் கொண்ட ரகசியங்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இந்திய ராணுவம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பை கடல் பகுதியில் உள்ள மாசகன் துறை முக பகுதியில்  35 00கோடி டாலர் மதிப்பில் நீர் மூழ்கி கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 2லட்சத்து 45ஆயிரம் கோடி மதிப்பில் இந்த 6 நீர் மூழ்கி கப்பல்கள் கட்டப்படுகின்றன.

இந்த கப்பல் கட்டுமான தகவல் ரகசியம் வெளியானதைத்தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இது குறித்து, முழு விசாரணை நடத்த  கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பாவிற்கு உத்தரவிட்டார். நீர் மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்கள் வெளியானது குறித்து மனோகர் பாரிக்கர் செய்தியாளர்களிடம் டெல்லியில் கூறுகையில்,

 இந்தியாவின் கடற்படை கப்பல்கள் குறித்த ரகசிய தகவல்கள் கம்யூட்டர் தகவல் திருடர்களால் திருடப்பட்டுள்ளதாக கருதுகிறேன். இது குறித்து முழுமையாக விசாரணை செய்யப்பட வேண்டும்  என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்