எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சட்டசபையில் நேற்று, மீனவர்களின் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, கடலோர காவற்படை மற்றும் இந்திய கப்பற்படை தகுதித் தேர்வுகளில் தேர்ச்சியடைந்து வேலைவாய்ப்பினை பெற மாதம் ரூ.1000 உதவித்தொகையுடன் , 300 மீனவ இளைஞர்களுக்கு, 3 மாத கால பயிற்சி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் சென்னையில் நவீன 'நகரும்' கடல்மீன் உணவகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சட்டசபையில், 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
எனது தலைமையிலான அரசு, மீனவர் நலத் திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் மீன்வள ஆதாரங்களைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மீனவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுத்து வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில், 35 மீன் இறங்கு தளங்கள் மற்றும் 7 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 14 இடங்களில் மீன் இறங்கு தளங்கள் மற்றும் 3 மீன்பிடி துறைமுகங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், உள்நாட்டு மீன்வளத்தை அதிகரிக்க பல்வேறு உட்கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மீன்வளத் துறை சம்பந்தமாக பின்வரும் புதிய அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
1. எங்களது தேர்தல் அறிக்கையில் உள்நாட்டு மீன் உற்பத்திக்குஅதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தோம். தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன் உற்பத்தி 2010-11-ம் ஆண்டு 1.71 லட்சம் டன் என இருந்தது. இது தற்போது 2.4 லட்சம் டன் என அதிகரித்துள்ளது. இதனை 4.5 லட்சம் டன்களாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குத் தேவையான மீன்குஞ்சு விரலிகள் உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பாண்டில் மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர், தஞ்சாவூர் மாவட்டம் அகரப்பேட்டை மற்றும் திருமங்கல கோட்டை, திருவாரூர் மாவட்டம் நல்லிக்கோட்டை, தேனி மாவட்டம் மஞ்சளாறு மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு ஆகிய 6 இடங்களில் மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்புப் பண்ணைகள் 13.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். இதனால் ஒவ்வொரு வருடமும் கூடுதலாக சுமார் இரண்டு கோடி மீன்குஞ்சு விரலிகள் உற்பத்தி செய்ய இயலும்.
2. கடல் மீனவர்கள் தங்களது மீன்பிடி கலன்களைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், பிடித்து வரும் மீன்களை சுகாதாரமான முறையில் கரை இறக்கிடவும், மீன் ஏலக் கூடம், வலை பழுது பார்க்கும் மையம், குளிரூட்டப்பட்ட கிடங்கு ஆகிய அனைத்து வசதிகளுடன்கூடிய மீன் இறங்கு தளங்கள் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, திருவாரூர் மாவட்டம் ஜாம்பவானோடை, தஞ்சாவூர் மாவட்டம் கரையூர்தெரு தூத்துக்குடி மாவட்டம் கொம்புத்துறை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், மோர்பனை ஆகிய 5 இடங்களில் 9.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இந்த இடங்களில் மீன் இறங்கு தளங்கள்அமைப்பதன் மூலம் 1,379 நாட்டுப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வழிவகை செய்ய இயலும்.
3. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை மற்றும் ‘நீலம்’ ‘தானே’ ஆகிய புயல்களுக்கு பின்னர் கடலின் நீரோட்டம் மற்றும் அலைகளின் தாக்கம் சரியாக கணிக்க இயலாததாக உள்ளது. அதன் விளைவாக துறைமுகங்கள் மற்றும் ஆற்றுமுகத்துவாரங்களில் மணல் மேடுகள் உருவாகி, கடல் மீனவர்கள் தங்களது படகுகளை கடலுக்குள் செலுத்த சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே, கடந்த 5 ஆண்டுகளில் ஐந்து ஆற்று முகத்துவாரங்களில் பராமரிப்பு, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நடப்பு ஆண்டில் கடலூர் மாவட்டம் முதுநகர், நாகப்பட்டினம் மாவட்டம் பழையாறு மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் கடலூர் மாவட்டம் வெள்ளாறு, நாகப்பட்டினம் மாவட்டம் பழையாறு, வெட்டாறு ஆகிய மூன்று ஆற்று முகத்துவாரங்களில் பராமரிப்பு தூர்வாரும் பணிகள் 18 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
4. சென்னை மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரி 42 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு பொழுது போக்கு தூண்டில் மீன்பிடிப்பு, நடைப் பயிற்சி பாதை, படகு குழாம், குழந்தைகள் விளையாட்டுத் திடல், பன்மாடி வாகன நிறுத்தும் கூடம் ஆகிய வசதிகளுடன் கூடிய பசுமை பூங்கா உருவாக்கப்பட்டு, என்னால் 27.2.2016 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இப்பசுமை பூங்கா பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளதுடன் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தினை செறிவூட்டிடும் விதமாகவும் அமைந்துள்ளது. பார்வையாளர்களை இப்பூங்காவிற்கு மேலும் ஈர்க்கும் நோக்கில், சூரியமின் வசதியுடன் கூடிய மீன் காட்சியகம் மற்றும் குளிர்சாதன கவிகை மாடத்தில் முப்பரிமாண காணொளிகளை காட்சிப்படுத்தும் மெய்நிகர காட்சியகமும் 6 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் நடப்பாண்டில் அமைக்கப்படும்.
5. தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் மீனவ மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு மீன் உணவுப் பொருட்களை தயாரித்திட அவர்களுக்குப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பினை உருவாக்கிடவும், பொதுமக்களுக்கு புரதச்சத்து நிறைந்த ருசியான தரமான மீன் உணவுப் பொருட்கள் கிடைத்திடும் வகையிலும், சுய உதவிக்குழு மகளிர் பயன்பெறும் வகையில் தங்கும் வசதிகளுடன் கூடிய பயிற்சிமையம் மற்றும் உடனடியான சமையலுக்கும், உடனடியாக உண்பதற்கும் என்பதற்கு உகந்த வகையில் கடல் மீன் உணவு வகைகளை தயாரித்திட ஒரு மைய சமையலறைக் கூடம் 8 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் காசிமேடு பகுதியில் அமைக்கப்படும். மேலும், கடல் மீன் உணவுகள் பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில், நியாயமான விலையில், சென்னை மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் விற்பனை செய்திட 1 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு நவீன நகரும் கடல்மீன் உணவகங்கள் அமைக்கப்படும்.
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த இளைஞர்கள் மீன்வளம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினை பெற்றிட ஏதுவாக பல்வேறு பயிற்சிகளையும், திட்டங்களையும் எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், இந்திய கடலோரக் காவற்படை மற்றும் இந்திய கப்பற்படையில் பணிபுரிவதற்கான உடற் தகுதி மற்றும் கடற்பயண திறமைகளை பெற்றிருந்தும், மீனவ சமுதாயத்தைச் சார்ந்த படித்த இளைஞர்கள் முறையான வழிகாட்டுதல்களும், பயிற்சிகளும் இல்லாததால், அந்த வாய்ப்புகளை பெற இயலாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். எனவே, மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பனிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு மேல்படித்த ஆர்வமுள்ள இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிப்பதன் மூலம், அவர்கள் இந்திய கடலோர காவற்படை மற்றும் இந்திய கப்பற்படை ஆகியவற்றால் நடத்தப்படும் தகுதித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சியடைந்து வேலைவாய்ப்பினை பெற இயலும். எனவே, ஆண்டு தோறும் 300 மீனவ இளைஞர்களுக்கு, 3 மாத கால பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இந்த திட்டம் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். என்னால் தற்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களின் பயனாக மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், மீனவர் வாழ்வாதாரமும் மேம்படும் என்பதைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
22 Apr 2024நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக்
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந