முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புழல் ஜெயிலில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, புழல் ஜெயிலில் அடிதடி வழக்கில் கைதான கைதியிடம் இருந்து செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுங்குவார் சத்திரத்தைச் சேர்ந்தவர் சுந்தர் என்ற அசோக். அடிதடி வழக்கில் அவரை போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் ஜெயிலர் உதயகுமார் நேற்று காலை ஜெயிலின் உள்ளே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கைதி சுந்தர் செல்போனில் பேசியபடி இருந்தார்.
இதையடுத்து செல்போனை அவர் பறிமுதல் செய்தார். இதுகுறித்து புழல் ஜெயிலில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவபாலன் வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மூலம் கைதி சுந்தர் யார்-யாரிடம் பேசினார் என்று ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் அவருக்கு செல்போன் கிடைத்தது எப்படி? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே புழல் ஜெயிலின் வெளிபக்க சுவர் அருகே கிடந்த மர்ம பையை ஜெயில் சூப்பிரண்டு அன்பழகன் கைப்பற்றினார். அதனை திறந்து பார்த்தபோது 2 செல்போன்கள், ஒரு கத்திரிக்கோல், 500 கிராம் கஞ்சா இருந்தது. இதனை வீசி சென்றவர்கள் யார் என்று தெரியவில்லை.ஜெயில் அதிகரிகள் ரோந்து வருவதை பார்த்ததும் கஞ்சா பையுடன் வந்த மர்ம நபர்கள் வீசி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago