முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ரூ.7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல்

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னை மணலி அருகே ரூ.7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சென்னை புதுமணலி அருகேயுள்ள கண்டெய்னர் யார்டில் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சோதனையில் பிளைவுட் சீட்டுகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட்கள் சிக்கின. சுமார் 700 அட்டைப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த சிகரெட்களின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ரூ.7 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த இந்த சிகரெட்கள் சிங்கப்பூர் நாட்டிலிருந்து சென்னைக்கு இறக்குமதியானதாக தெரியவந்துள்ளது. சிகரெட்களை இறக்குமதி செய்த நபரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்