முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்குமாரின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 9-ம் தேதி வரை நீட்டிப்பு

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 9-ம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை பகுதியை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை, போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். சுவாதி கொலை செய்யப்பட்டபோது, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் வெளிப்புறம் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளோடு ராம்குமாரின் உருவத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக, புழல் சிறையில் வைத்து ராம்குமாரை போலீஸார் வீடியோ எடுத்தனர். 

இந்நிலையில், அவரது நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலம் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, ராம்குமாரை செப்டம்பர் 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க 14-வது மாஜிஸ்திரேட் கோபிநாத் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்