முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, சசிகலா புஷ்பா எம்.பி. தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினையை சொல்லலாமே தவிர ஒட்டுமொத்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.

சென்னை விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலா புஷ்பா எம்.பி. தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினையை சொல்லலாமே தவிர ஒட்டுமொத்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.குளச்சல் துறைமுகத்தின் தற்காலிக அலுவலகத்தின் திறப்பு விழா வருகிற 5-ந் தேதி கருங்கல் அருகே நடைபெற உள்ளது.குளச்சல் துறைமுகத்திற்கு விரோதமாக போராட்டத்தை தூண்டி விடுபவர்கள் மீனவர் சமுதாயத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள். குளச்சல் துறைமுகம் அமைந்தால் மீனவர்கள் சமுதாயம் மிக பெரும் முன்னேற்றம் அடையும்.வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலில் என்னை பொருத்தமட்டில் பா.ஜனதா தனியாக தான் போட்டியிட வேண்டும். இது என்னுடைய கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்