எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - மின்சார செலவினை குறைக்க ஊரகப் பகுதிகளில், ரூ.320 கோடி மதிப்பில் தெருவிளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:- ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற வேண்டும் என்ற அடிப்படையில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, பல்வேறு முன்னோடி திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம் மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
1. 2015-16-ம் ஆண்டில், முதன் முறையாக, "தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம், 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டது. கிராம ஊராட்சிகளில் மண் சாலைகளை தார்ச் சாலைகளாக மேம்படுத்தவும், சேதமடைந்த தார்ச் சாலைகளை வலுப்படுத்தவும் மற்றும் சிறு பழுதடைந்த தார்ச் சாலைகளை புதுப்பித்து பராமரிக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதே ஆண்டில், 900 கிலோ மீட்டம் நீளமுள்ள மண் சாலைகள் தார்ச் சாலைகளாக மேம்படுத்தப்படும். அதிக அளவில் சேதமடைந்த 1,400 கிலோ மீட்டர் நீளமுள்ள தார்ச்சாலைகள் சீரமைக்கப்படும். 1,200 கிலோ மீட்டம் நீளமுள்ள சிறு பழுதடைந்த தார்ச்சாலைகள் புதுப்பிக்கப்படும். இவை அனைத்தும் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இதன் மூல்ம, விவசாயப் பெருங்குடி மக்கள் தங்களது விளைபொருட்களை எளிதில் சந்தைப்படுத்தவும், கிராமப்புற பொருளாதாரம் மேம்பாடு அடையவும் வழிவகுக்கும்.
2. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 78 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள், 148 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 10 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
3. நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உள்ள இடங்களில், தனிநபர் விவசாய நிலங்களில் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கி, விவசாய விளைநிலங்களின் பரப்பினை அதிகரிக்க, தனிநபர் கிணறுகள் மற்றும் குழு கிணறுகள் அமைக்கப்படும். இந்த ஆண்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலங்களில், ஒரு கிணறு 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 250 தனிநபர் கிணறுகள் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
மேலும், போதிய இடம் இல்லாத நிலையில் குறைந்தபட்சம் 3 விவசாயிகளைக் கொண்ட குழுக்களுக்கு, அரசு இடங்களில், ஒரு குழு கிணறு தலா 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 250 குழு கிணறுகள் 30 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் மொத்தத்தில் 500 கிணறுகள் 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் நீர்ப்பாசன வசதியற்ற விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், பயிரிடப்படும் நிலப்பரப்பு அதிகரித்து ஊரக விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
4. ஊரகப் பகுதிகளில் 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் அறிவுசார் வளர்ச்சியைப் பெற்று வளர்வதற்கான உகந்த சுற்றுச்சூழலை உருவாக்கிட அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் வளர் இளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, உடல் நலப் பரிசோதனை செய்வதுடன் நோய் எதிர்ப்பு மற்றும் சுகாதாரக் கல்வி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றன. இந்த ஆண்டில் ஊரகப் பகுதிகளில், 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1,000 அங்கன்வாடி மையங்கள் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். இதன் மூலம் இம்மையங்களில் பயிலும் குழந்தைகள், காற்றோட்டமான, அதிக வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான இடங்களில் பயின்றிட வழிவகை ஏற்படும்.
5. ஊரகப் பகுதிகளை பசுமை மயமாக்க ஊரகச் சாலைகளின் இரு மருங்கிலும் பழ மரங்கள், கால்நடைத் தீவன மரங்கள் மற்றும் வருவாய் அளிக்கும் மரங்கள் நடப்படும். இம்மரங்கள், சாலைகளில் மண் அரிப்பைத் தடுப்பதுடன், ஊராட்சிகளுக்கு கூடுதலாக தொடர் வருவாய் கிடைக்கச் செய்திடும். இந்த ஆண்டில் கிராம ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் பிரதம மாதிரி கிராம திட்ட சாலைகளின் இரு மருங்கிலும் 10,000 கிலோ மீட்டம் நீளத்திற்கு 195 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.
6. சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாத்திடவும், ஊரகப் பகுதிகளை பசுமை மயமாக்கவும், வனத்துறையினருடன் ஒருங்கிணைந்த 68 லட்சம் பழமரக் கன்றுகள் மற்றும் கட்டிடப் பணிகளுக்கு, பயன்படும் மரக்கன்றுகள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி நிலங்கள், அரசு நிலங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற பொருத்தமான இடங்களில் 555 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு நடப்பட்டு பராமரிக்கப்படும்.
7. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைச் சார்ந்த பல்வேறு சங்கங்கள், கிராம ஊராட்சி செயலர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது வழங்கப்படும் சிறப்பு மாத ஓய்வூதியம் மற்றும் ஒட்டுமொத்த தொகையை உயர்த்தி வழங்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, கிராம ஊராட்சி செயலர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் ஒட்டு மொத்தத் தொகையை 50,000 ரூபாயிலிருந்து 60,000 ரூபாயாகவும், சிறப்பு மாத ஓய்வூதியம் 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
8. கிராம ஊராட்சிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதற்கு எனது தலைமையிலான அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், கழிவுப் பொருட்களை சேகரித்தல், மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்தெடுத்து பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள 2015-ம் ஆண்டு முதல் ‘தூய்மைக் காவலர்கள்’ ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 9,000 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திடக்கழிவுகளை சேகரித்தல், பிரித்தல், அவற்றை பாதுகாப்பாக அகற்றுதல், மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றிற்கு மூன்று சக்கர மிதிவண்டிகள் தள்ளுவண்டிகள், குப்பைத் தொட்டிகள், குப்பைகள் பிரித்தெடுக்கும் கொட்டகைகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கண்ட ஊராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுத்த பிற மாநில அரசுகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆண்டில், மீதமுள்ள 3,524 கிராம ஊராட்சிகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். மேலும், ஏற்கெனவே இத்திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இவற்றிற்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் இதன் மூலம், இந்தியாவிலேயே அனைத்து கிராம ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் முதல் மாநிலம் என்ற பெருமை தமிழ்நாட்டிற்கு கிடைக்கும்.
9. முழு சுகாதார தமிழகம் என்ற இலக்கினை அடைய எனது தலைமையிலான அரசு பல்வேறு முன்முயற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திறந்தவெளி மலம் கழித்தல் மற்ற மாநிலமாக உருவாக்குவதற்கு அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து, தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் திட்டங்களின் கீழ் இந்த ஆண்டு 15 லட்சத்து 17 ஆயிரம் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்படும். இதனால், மேலும் 4,175 கிராம ஊராட்சிகள் சுகாதாரத்தில் தன்னிறைவு பெற்று அதன் மூலம் அவை திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக உருவாகும்.
10. குக்கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளும் ‘தாய்’ திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘தாய்’ திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களின் பராமரிப்பில் உள்ள சிறுபாசன ஏரிகள் விரிவான முறையில் புனரமைப்பு செய்யப்படும். இந்த ஏரிகளில் உள்ள முட்புதரக்களை அகற்றி இயந்திரங்களின் மூலம் ஏரிகள் தூர்வாரப்பட்டு மதகு மற்றும் கலங்கல்கள் புதிதாக கட்டப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்படும். இதன் மூலம் குக்கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டினை களையவும் நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், சிறுபாசன ஏரிகளின் முழு கொள்ளளவினை மீட்கவும், குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நீரினை சேமித்து முறைப்படுத்தவும் வழிவகை ஏற்படும்.
இந்த ஆண்டில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,200 சிறுபாசன ஏரிகளை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், ஏரிகளில் சேமிக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பதுடன் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். மேலும் ஊரகப் பகுதிகளில் விவசாயப் பரப்பளவு அதிகரிப்பதுடன், ஊரகப் பொருளாதாரம் உயரவும் வழிவகுக்கும். தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளின் தெருக்களில் சுமார் 16 லட்சத்து 46 ஆயிரம் குழல் விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன. தெரு விளக்குகளை முறையாகப் பராமரித்தல், மின்சார செலவினைக் குறைத்தல் மற்றும் ஒளி விளக்குகளின் நீடித்த செயல்திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொங்டு ஊரகப் பகுதிகளில் உள்ள குழல் விளக்குகள் அனைத்தும் எல்.இ.டி விளக்குகளாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் இந்த ஆண்டு மீதமுள்ள 8 லட்சத்து 24 ஆயிரம் குழல் விளக்குகள் எல்.இ.டி தெருவிளக்குகளாக மாற்றியமைக்கப்படும்.
சுய உதவிக் குழுக்களுக்கு போதுமான கடன் உதவியை, உரிய நேரத்தில், குறைந்த வட்டி விகிதத்தில், வங்கிகள் வழங்குவதன் வாயிலாக, பெண்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய இயலும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, கடந்த 5 ஆண்டுகளில் 26 ஆயிரத்து 460 LED street lights at Rs .320 crore The lights will be converted: Chief Minister Jayalalithaa announced in the Assemblyகோடி ரூபாய் கடனாக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சுய உதவிக் குழுக்களுக்கு 6,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நான் வெளியிட்ட இந்த அறிவிப்புகள் மூலம் ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறுவதுடன் அவர்கள் பொருளாதார நிலை உயரவும் வழிவகை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.