முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எஸ். அதிகாரிகள் பதவி உயர்வு - இடமாற்றம் : தமிழக அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான பதவி உயர்வு மற்றும் இடமாற்ற விவரம் முதன்மைச்செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முதன்மைச்செயலாளர் அபூர்வ வர்மா நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பதவி உயர்வு மற்றும் இட மாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் . அதிகாரிகள் விவரம் வருமாறு,
தூத்துக்குடி சப்-டிவிஷனில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக உள்ள டாக்டர் பி.அருண் சக்தி குமார்  போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று மதுரை  நகரத்தில் தற்போது காலியாக உள்ள  சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கமுதி சப்-டிவிஷனின் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த தேஷ் முக் சேகர்  போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று மதுரை  போலீஸ்(அமலாக்கம்) சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.என். உமையாளுக்கு பதிலாக தேஷ் முக் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல் பட்டு சப்-டிவிஷன் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜி ஜார்ஜ் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று  சேலம் நகர  சட்டம், ஒழுங்குபோலீஸ் துணை ஆணையராக நியமிக்கப்படுகிறார். செல்வராஜூவுக்கு பதிலாக நியமிக்கப்படுகிறார். தூத்துக்குடி ஊரக சப்-டிவிஷன் உதவி போலீஸ்  சூப்பிரண்டு டாக்டர் எஸ். தீபா கனிகர் பதவி  உயர்வு பெற்று சென்னை வீடியோ திருட்டு தடுப்பு பிரிவின் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்படுகிறார். எச்.ஜெயலட்சுமிக்கு பதிலாக அவர் நியமிக்கப்படுகிறார். மதுரை அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு எஸ்.என். உமையாள் இடமாற்றம் செய்யப்பட்டு திருச்சி  தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 1 பட்டாலியன் திருச்சி கமாண்டட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.விஜயலட்சுமிக்கு பதிலாக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி  தமிழ்நாடு சிறப்பு போலீஸ்  1 பட்டாலியன் கமாண்டட் எம்விஜய லட்சுமி,சென்னை  சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் உதவி போலீஸ் ஐ.ஜியாக  நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த பணியிடம் காலியாக உள்ளது.

ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் XI பட்டாலியன் கமாண்டட் ஆர்.சின்னசாமி திருப்பூர் தலைமையகம் போலீஸ் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த பணியிடம் காலியாக உள்ளது.  சேலம் நகர  சட்டம் மற்றும்  ஒழுங்கு போலீஸ் துணை ஆணையர் எஸ். செல்வராஜ்  மதுரை நகரம்,தலைமையகம் போலீஸ் துணை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது இந்த பணியிடம் காலியாக உள்ளது. சேலம் நகர சட்டம் மற்றும்  ஒழுங்கு போலீஸ் துணை ஆணையர் எஸ். செல்வராஜ் தற்போது மதுரை போலீஸ் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த பணியிடம் காலியாக உள்ளது.  சென்னை  வீடியோ திருட்டு  தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு எச்.விஜயலட்சுமி தற்போது கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு  மத்திய சரகம் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த பணியிடம் காலியாக இருக்கிறது.

 கட்டாய காத்திருப்பில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு பி.கண்ணம்மாள்  சென்னை தலைமையகம் போலீஸ் உதவி ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். பி.ஆர் .வெண்மதிக்கு பதிலாக  அவர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தலைமையகம் போலீஸ் உதவி ஐ.ஜியாக உள்ள பி.ஆர் . வெண்மதி தற்போது சென்னை தமிழ்நாடு கமண்டோ பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த பணியிடம் காலியாக உள்ளது.கட்டாய காத்திருப்பில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு  வந்திதா பாண்டே  ராஜபாளையம்,தமிழ்நாடு சிறப்பு போலீஸ் XI  பட்டாலியன் கமாண்டட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசின் முதன்மைச்செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்