எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பாண்டியராஜன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பாண்டியராஜனுக்கு அமைச்சர்கள், அ.தி.மு.க பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஜெயலலிதா புதிய மாற்றங்களை மேற்கொண்டார். பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அமைச்சராக க.பாண்டியராஜன் நியமிக்க ஆளுநருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்று, கவர்னர் ரோசய்யா, பாண்டியராஜனை பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமித்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் ராஜ்பவனில் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று பதவியேற்றார். நேற்று மாலை நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவிற்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை ஆளுநர் ரோசய்யா வரவேற்றார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை 4.35 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பு விழா தொடங்கியது.
தலைமை செயலாளர் அனைவரையும் வரவேற்று பதவியேற்பு விழாவை அறிவித்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ஆளுநர் ரோசய்யா, புதிய அமைச்சர் பாண்டியராஜனுக்கு பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சர் பாண்டியராஜன், ஆண்டவன் பெயரால் பதவியேற்பு உறுதிமொழி மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் அனைவருடனும் முதலமைச்சர் ஜெயலலிதா குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த விழாவில் தலைமை செயலாளர் ராமமோகனராவ், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் அமைச்சர்கள், ஒ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செல்லூர் கே.ராஜூ, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் பாண்டியராஜனின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
புதிய அமைச்சராக பதவியேற்ற பாண்டியராஜன் நேற்று மாலையே தலைமை செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர் பாண்டியராஜன் வாழ்க்கை குறிப்பு - கடந்து வந்த பாதை: புதிய அமைச்சராக பதவியேற்ற பாண்டியராஜன் விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியில் 1959-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி பிறந்தார். பாண்டியராஜன் குடும்பத்தினருடன் ஆவடியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
விளாம்பட்டியை சொந்த ஊராகக் கொண்ட பாண்டியராஜன், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டே பள்ளிப் படிப்பை முடித்த பாண்டியராஜன், கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் பி.டெக். பட்டம் பெற்றார். இதையடுத்து ஜாம்ஷெட்பூரில் எம்.பி.ஏ. படித்துமுடித்த அவர், மேற்குவங்கத்தில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியில் சேர்ந்தார்.
அந்த அனுபவத்தைக் கொண்டு சென்னையில் கடந்த 1992-ல் மாஃபா (Mofoi) எனும் வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இதன்பின்னர்தான் பாண்டியராஜனாக இருந்த அவர், மாஃபா பாண்டியராஜனாக அறியப்பட்டார். மனிதவள மேம்பாட்டுத் துறையில் உள்ள அனுபவத்தால் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பல நாடுகளிலும் வேலை வாய்ப்புப் பெற முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
அரசியலில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட பாண்டியராஜன், பின் தே.மு.தி.க.வில் இணைந்தார். பின் அ.தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டுடன் தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏ-வாக இருந்து வந்தார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பாண்டியராஜன், அதிகாரப்பூர்வமாக அ.தி.மு.க.வில் இணைந்தார்.
இதையடுத்து ஆவடி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட வாய்ப்பு பெற்ற பாண்டியராஜன், மக்களின் குறைகளைக் கேட்டறிய டெக்னாலஜியின் துணைகொண்டு ’மை ஆவடி ஆப்’ (My Avadi App) எனும் செல்போன் செயலியை உருவாக்கி பிரபலம் ஆனார். தேர்தலில் வென்ற மாஃபா, பேரவையில் எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து அ.தி.மு.க தலைமையின் நன்மதிப்பைப் பெற்றார். குறிப்பாக தி.மு.க உறுப்பினர் தியாகராஜனின் ஆங்கில உரைக்கு, அவர் பாணியிலேயே பதிலளித்து அ.தி.மு.க உறுப்பினர்களிடையே பிரபலமானார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? - தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிடு
17 Apr 2024சென்னை : மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிட்டுள்ளது.