முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, தென் தமிழ்நாடு குமரி பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழ்நாடு குமரி பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.இது குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

குமரி பகுதியில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக உத்தரமேருரில் 12 செ.மீ. மழை பெய்து உள்ளது. காஞ்சீபுரம் 10 செ.மீ. காவிரிபுரம், ஆரணியில் தலா 9 செ.மீ பதிவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்