எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.87,062 கோடி முதலீட்டில் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், அரியலூரில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் 675 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
தொழில் துறையில் சிறப்பான இடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. எனது தலைமையிலான அரசு மேற்கொண்ட முன்முயற்சிகளின் காரணமாக முதலீட்டாளர்கள் தொழில் துவங்க நாடி வரும் இடமாக தமிழ்நாடு விளங்குகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2,42,160 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், இதுவரை 64 நிறுவனங்கள் 87,062 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் துவங்குவதற்கான பணிகளை துவங்கி விட்டன. அவை, இதுவரை 25,020 கோடியே 48 லட்சம் ரூபாய் அளவிற்கு முதலீடு செய்துள்ளன. ஏனைய நிறுவனங்கள் தேவையான முன் ஆயத்த பணிகளைமேற்கொண்டுள்ளன.
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு மேலும் மேன்மை அடையும் வகையில், பின்வரும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
1. உயிரி தொழில்நுட்ப துறையில் ஆரம்ப நிலை நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், உயிரி தொழில்நுட்ப அபிவிருத்தி மையம் ஒன்று 20 கோடி ரூபாய் செலவில் சென்னை தரமணியில் உள்ள டைசல் பயோபார்க் நிறுவனத்தில் நிறுவப்படும். இந்த மையமானது, உயிரி தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தனி நபர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை திட்டமிடவும், உருவாக்கவும் மற்றும் செயல்படுத்தவும் வழிவகை செய்து உயிரிதொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த மையமானது உட்கட்டமைப்பு வசதிகளை கொண்ட ஆய்வகங்கள், வணிகப் பகுதிகள் மற்றும் அலுவலகப் பகுதிகள்ஆகியவைகளைக் கொண்டதாக 12,000 சதுர அடியில் அமையும்.
2. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் சிப்காட் வல்லம் - வடகால் தொழில் பூங்காவில், 245 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள வானூர்திப் பூங்காவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உலகத் தரத்தில் அமைக்கப்படும். மேலும், இப்பூங்காவில், தொழில்களுக்கான பொது ஆய்வு மற்றும் தொழில்நுட்ப மையம்ஒன்றும் அமைக்கப்படும்.
3. 1979-ம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித நிறுவனம் கரும்புச் சக்கையை முக்கிய மூலப் பொருளாக உபயோகப்படுத்துவதில் உலகிலேயே முதலிடத்தையும், அச்சு மற்றும் எழுது காகித உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது இடத்தையும் வகிக்கிறது. கரூர் மாவட்டம் காகிதபுரம் ஆலையில் உள்ள காகித ஆலையின் செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த, ரசாயன மீட்பு கொதிகலன் பிரிவில் மின்னியல் துகள்படிவு அமைப்பினை விரிவாக்கம் செய்தல் மற்றும் கொதிகலன் பிரிவில் நிலக்கரி சேமிப்பு கிடங்கினை விரிவாக்கம் செய்தல், மின் உற்பத்தி பிரிவில் பழைய மின்மாற்றிகள் மற்றும் மின் கடத்திகளை புதுப்பித்தல், காகிதம் மற்றும் காகிதக் கூழ் பிரிவில் தேய்ந்த அழுத்த உருளைகளை சீரமைத்தல் ஆகிய அபிவிருத்தி திட்டங்கள் 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
4. திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை வட்டம், மொண்டிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தால் ஆண்டொன்றுக்கு இரண்டு லட்சம் டன் திறன் கொண்ட இருபுறமும் மேற்பூச்சு செய்யப்பட்ட, அடுக்கு காகித அட்டை ஆலை ஒன்று நிறுவப்பட்டு என்னால் 29.1.2016 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் காகிதம் மற்றும் அடுக்கு காகித அட்டையின் மொத்த உற்பத்தியில் இந்திய அளவில் இந்த நிறுவனம் மூன்றாம் இடத்தை அடைந்துள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அடுக்கு காகித ஆலையின் தேவையினை கருத்தில் கொண்டுதேய்ந்த உருளை செப்பனிடும் இயந்திரம், சுருள் குழாய்களை தயாரிக்கும் இயந்திரம் ஆகியவை நிறுவப்படும். மேலும், அடுக்கு காகித அட்டை வைப்பதற்கான கிடங்கு விரிவாக்கம் செய்யப்படும். இவை 35 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
5. தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், உற்பத்தியைப் பெருக்கவும், நவீன இயந்திரங்களைக் கொண்டு குவாரி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், 10 மண்வாரி இயந்திரங்கள், 12 சுரங்க டிப்பர் லாரிகள், 10 காற்றழுத்த இயந்திரங்கள் மற்றும் 4 ஹைட்ராலிக் டிரில்லர் ஆகியவை 20 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும்.
6. அரியலூரில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் 675 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரியலூரில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் அரியலூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
(i) அரியலூர் மாவட்ட மருத்துவமனைக்கு 36,000 சதுர அடி பரப்பளவு கொண்ட புதிய கட்டிடம், பார்வையாளர்கள் காத்திருப்போர் அறை, நவீன சலவையகம் மற்றும் உள் மற்றும் வெளி நோயாளி பிரிவுகள் அமைக்கப்படும். ஆய்வகம் புதுப்பிக்கப்பட்டு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்கப்படும். இவை 9 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
(ii) அரியலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆனந்தவாடி, மணக்குடி, சீனிவாசபுரம், தாமரைகுளம் உசேனாபாத், ராஜீவ் நகர், வாலாஜாநகரம், கிருஷ்ணாபுரம் மற்றும் ராவுத்தன்பட்டி ஆகிய கிராமங்களிலிருக்கும் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், 2 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள், ஆழ்துளை கிணறுகள், சுற்றுச் சுவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சிறுவர், சிறுமியருக்கான தனித்தனி கழிப்பறைகள் ஆகிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
(iii) அரியலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் மரக்கன்றுகள் நடுதல், கசிவு நீர் குட்டைகள் அமைத்தல், மழை நீர் சேகரிப்பு செய்தல் போன்ற பசுமை மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மொத்தத்தில் அரியலூர் பகுதியில் 13 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலமாக மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
7. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில், தொழில் பூங்காக்களை எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தி வருகிறது. மேலும் தொழில் பூங்காக்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 2,300 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வரும் சிப்காட் செய்யாறு தொழில் வளாகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முதற்கட்டமாக 1,300 ஏக்கர் நிலப்பரப்பில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான உட்சாலைகள், தண்ணீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள், மழைநீர் வடிகால் வசதி, சாலையோர மரங்கள், தெரு விளக்குகள் மற்றும் இதர வசதிகள் உலகத் தரத்தில் அமைக்கப்படும். இப்பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும்.
தற்போது நான் அறிவித்துள்ள அறிவிப்புகளின் வாயிலாக தொழில் வளர்ச்சி மேலும் மேம்பட வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.