முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு: அகில இந்திய தேசிய லீக் கட்சி அறிவிப்பு

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, அகில இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயற்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்  கூடியது.

இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜாஹூர் அஹமது  முன்னிலை வகித்தார்.  தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விபரம் வருமாறு :

1.   காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவத்திற்கு துணைபோகும் கர்நாடக அரசுக்கு அகில இந்திய தேசிய லீக் கட்சி கண்டனத்தை தெரிவிப்பதோடு, வன்மையாக கண்டிக்கிறது
.2.  காவிரி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொறுமையோடு, சிறப்பாக இந்த விசயத்தில் செயல்பட்டு, தமிழகத்தில் அமைதி நிலவ செய்துள்ளதற்கு, அகில இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
3.   நதி நீர் பிரச்சனைகளில் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அகில இந்திய தேசிய லீக் கட்சி துணை நிற்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
4.  காவிரி உள்பட தமிழகத்தின் ஜீவதாரண பிரச்சனைகளுக்கு வழிவகுத்து விட்டு தற்போது கபட நாடகம் நடத்தும் திமுகவின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்
5.   தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு முழு ஆதரவு அளிப்பது என்றும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவிக்கும் கழக வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த பகுதிகளில் அகில இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபடவும் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ்கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்