முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு எதிராக பேசியே கெஜ்ரிவாலின் நாக்கு நீண்டுவிட்டது : மத்திய அமைச்சர் பாரிக்கர் மறைமுக தாக்கு

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பேசியே, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் நாக்கு நீண்டுவிட்டது. அதனாலேயே இப்போது அவருடைய நாக்கை வெட்டி ஒழுங்குபடுத்த வேண்டிய தாகிவிட்டது’ என்று, மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தலை வரான அரவிந்த் கெஜ்ரிவால், தொடர் இருமல் பிரச்சினைக்குத் தீர்வாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அண்மையில் நாக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய தலைவரும், மத்திய பாதுகாப்பு அமைச்சருமான மனோகர் பாரிக்கர் பங்கேற்று பேசும்போது,

‘‘டெல்லியில், அவர் எப்போதும் பிரதமர் மோடிக்கு எதிராகவே பேசிக்கொண்டிருந்தார். இங்கே (கோவாவில்) எனக்கு எதிராக பேசு கிறார். இதனால் தான் அவரின் நாக்கு நீண்டு வளர்ந்துவிட்டது. இப்போது, அதையும் வெட்டி ஒழுங்குபடுத்த வேண்டியதாகி விட்டது’’ என, கெஜ்ரிவாலின் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார். எனினும், கெஜ்ரிவால் தற்போது மருத்துவ விடுப்பில் இருப்பதை சுட்டிக்காட்டி, ‘அவருக்கு என் அனு தாபங்கள்’ என்றும் பாரிக்கர் குறிப் பிட்டார். அப்போது கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் மற்றும் மாநில அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கோவாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு கூடுவதோடு, பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்கும் முயற்சி களும் நடைபெற்று வருகின்றன. இதனால், ஆம் ஆத்மிக்கு எதிரான விமர்சனங்களை பாஜக கடுமை யாக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்