முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் விருப்பமனு கொடுக்க இன்று கடைசி நாள்

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுபவர்கள் விருப்ப மனு கொடுக்க இன்று  கடைசி நாளாகும்.

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந்தேதி முடிவடைகிறது. புதிய உறுப்பினர்கள் 25-ந்தேதி பதவி ஏற்க வேண்டும். இதற்காக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு விருப்ப மனு வாங்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க-வில் கடந்த 16-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளருடன் அ.தி.மு.க மேலிட பொறுப்பாளர் ஒருவர் இணைந்து தினமும் மனுக்களை வாங்கி வருகின்றனர். இதே போல், தி.மு.க.விலும் கடந்த 19-ந்தேதி முதல் மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் விருப்ப மனு கொடுத்து வருகின்றனர்.

விருப்ப மனு கொடுக்க அ.தி.மு.க -தி.மு.க.வில் இன்று  கடைசி நாளாகும். அ.தி.மு.கவில் நாளை இரவு 8 மணிவரை மனுக்கள் வாங்கப்படுகிறது. தி.மு.க.வில் இன்று  மாலை வரை மனுக்கள் பெறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்கள் போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த வார்டுகள் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் அ.தி.மு.க- தி.மு.க.வில் ஏராளமானோர் போட்டியிட விருப்ப மனு கொடுத்து வருகின்றனர்.

அ.தி.மு.கவில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும் தலா 350 க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்துள்ளனர். தி.மு.க.வில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும் 100-க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்துள்ளனர். மொத்தம் 200 வார்டுகளுக்கு அ.தி.மு.க -தி.மு.க-வில் இருந்து 2500-க்கும் மேற்பட்டோர் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்