எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க் - பாகிஸ்தானை 'தீவிரவாத தேசம்' என்று குறிப்பிட்ட இந்தியா, தீவிரவாதத்துக்கு உறுதுணை புரிவது என்ற தமது 'நீண்ட காலக் கொள்கை'யின் அடிப்படையில் இந்தியர்களுக்கு எதிராக போர்க் குற்றங்களை இழைப்பதாக கடுமையாக சாடியுள்ளது. நியுயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய சில மணி நேரங்களில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய தரப்பில் இவ்வாறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. ஐ.நா.வால் தீவிரவாதிகள் என வரையறுக்கப்பட்டவர்கள் பாகிஸ்தான் தெருக்களில் சுதந்திரமாக உலா வருவதாகவும், உள்நாட்டு அரசின் ஆதரவுடன் அவர்கள் இயங்கி வருவதாகவும் இந்தியா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் தற்போதைய நிலை தொடர்பான நவாஸ் ஷெரீபின் கருத்துகளுக்கு கடுமையான பதிலடி தரும் விதமாக பேசிய ஐ.நா.வுக்கான இந்தியச் செயலர் ஏனம் கம்பீர், "தீவிரவாதம் என்பதே மிக மோசமான மனித உரிமை மீறல்" என்று பாகிஸ்தானை பகிரங்கமாகத் தாக்கிப் பேசினார். அவர் மேலும் கூறும்போது, "போர்க் குற்றங்களுக்கு அடித்தளமாக அமைத்து செயல்பட்டு வருவது ஏற்புடையது அல்ல. தீவிரவாதத்துக்கு ஊக்கமளித்து உறுதுணையாக இருந்து வரும் பாகிஸ்தானால் எங்கள் நாடும், எங்களின் அண்டை நாடுகளும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. எங்கள் பகுதி முழுவதுமே பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
சர்வதேச நாடுகளில் இருந்து கிடைக்கக் கூடிய நிதியுதவிகளை, தங்கள் அண்டை நாடுகளுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு பயிற்சிகள், நிதியுதவிகள் வழங்கி ஆதரவு அளிக்கவே பயன்படுத்தி வருவதாக பாகிஸ்தான் மீது அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.
ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவர் மசூத் ஆஸாத் மற்றும் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லக்வி ஆகியோரை மேற்கோள் காட்டிய அவர், ஐ.நா.வால் தீவிரவாதிகள் என வரையறுக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட தீவிரவாதிகளையும், தீவிரவாதத் தலைவர்களையும் சுதந்திரமாக தங்கள் தெருக்களில் வலம்வர பாகிஸ்தான் துணைநிற்பதாக சாடினார். மேலும், பாகிஸ்தான் அரசின் அனுமதியுடனே தங்கள் இயக்கத்துக்கான நிதிகளை தீவிரவாத அமைப்புகள் வெளிப்படையாகத் திரட்டி வருவதாகவும் அவர் குறை கூறினார்.
"தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக சர்வதேச நாடுகளிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு, தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவே பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது" என்றார் அவர். இந்தியப் படையினரால் கடந்த ஜூலை 8-ம் தேதி கொல்லப்பட்ட ஹிஸ்ப்-உல்-முஜாகுதீன் தீவிரவாதி புர்ஹான் வானிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் புகழாரம் சூட்டியதையும் அவர் கடுமையாக சாடினார். "பாகிஸ்தான் பிரதமர் இப்போதும் கூட தீவிரவாத அமைப்பின் கமாண்டர் ஒருவருக்கு ஆதரவாக பேசுவதைக் கேட்க முடிகிறது. பாகிஸ்தான் தனது மக்களுக்கு எதிரான தீவிரவாதத்தை முடுக்கிவிடுவது அங்கு ஜனநாயகமே இல்லாத நிலையைக் காட்டுகிறது.
தீவிரவாத அமைப்பினருக்கு ஆதரவு நல்கும் பாகிஸ்தான், தன் நாட்டில் வாழும் சிறுபான்மையினருக்கும் பெண்களுக்கும் அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கிறது" என்றார் ஏனம் கம்பீர். காஷ்மீரில் தீவிரவாதம் ஓங்குவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்ற அவர், ஜம்மு - காஷ்மீர் மக்களைப் பாதுகாக்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார். அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலுக்குப் பிறகு, அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததையும், அங்கு அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதையும் அவர் தனது பேச்சில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
யூரி தாக்குதலின் தொடர்ச்சியாக.... காஷ்மீர் - பாரமுல்லா மாவட்டத்தில் யூரி பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது, சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேர் திடீரென ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதில் 18 வீரர்கள் பலியாயினர். இதன் தொடர்ச்சியாக, யூரி ராணுவ முகாம் மீதான தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் விவரத்தை பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டுக்குள் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும், அவற்றுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தும்படியும் பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி உள்ளது.
வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித்துக்கு சம்மன் அனுப்பி வரவழைத்தார். அவரிடம், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகள்தான் யூரி தாக்குதலுக்குக் காரணம் என்பதைத் தெரிவித்தார்.
யூரி சம்பவம் தொடர்பாகவும் ஐ.நா. கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்த ஏனம் கம்பீர், தீவிரவாதப் பிரச்சினையில் சர்வதேச அமைப்புகளிடம் ஒருவிதமாகவும், நிஜத்தில் முன்னுக்குப் பின் முரணாகவும் பாகிஸ்தான் நடந்துகொள்வதாக சரமாரியாகத் தாக்கிப் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,