முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் கால் இறுதியில் ஸ்ரீகாந்த்

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோ  - ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.   ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் தனது நாட்டை  சேர்ந்த அ ஜய் ஜெயராமை எதிர்த்து ஸ்ரீகாந்த். ஆடினார். இந்த ஆட்டத்தின்,முதல் செட்டில் 21-16 என ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தபோது, இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜெயராம் போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்த், கால் இறுதியில் ஜெர்மனியின் மார்க் வெய்ப்லரை சந்திக்கிறார். அவருக்கு எதிராக ஸ்ரீகாந்த் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி இரு வெற்றிகளை பெற்றுள்ளார். மற்றொரு இந்திய வீரரான பிரனோய் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 16-21, 19-21 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் விக்டரிடம் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 44 நிமிடங்களில் முடிவடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்